விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை முன்னாள் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சை அண்ணாசாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் உருவப்பொம்மையை எரித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், திமுகவினர் மீது தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை முன்னாள் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று தஞ்சையில் திமுகவினர் நடத்திய போராட்டத்தின் போது, முதலமைச்சர் விஜயின் உருவப்பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் மீது தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!
நடந்தது என்ன?
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டார். இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட திமுகவினர் ரயிலடி பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு அண்ணாசாலை பகுதிக்கு வந்தனர்.
அங்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிக்க வேண்டும், அவர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும், போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் உருவப்பொம்மையை திடீரென சாலையின் நடுவில் கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை முன்னாள் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மீது தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!