தவெக பெண் நிர்வாகிகளுக்கு இழிவு! அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மீது வழக்குப்பதிவு!
தவெக பெண் நிர்வாகிகள், உறுப்பினர்களை இழிவாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் மற்றும் பெண் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் மிக அநாகரிகமான முறையில் இழிவாகப் பேசியதாக, பிரபல அரசியல் விமர்சகர் திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி என்பவர் மீது காவல் துறையினர் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியின் பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைக் குறிவைத்து அவதூறுகளும், ஆபாசப் பேச்சுக்களும் பரப்பப்படுவதாகத் தவெக தலைமைக்குத் தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், தவெக பெண் தொண்டர்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு, கடலூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ திரு. ராஜ்குமார் அவர்கள் கடலூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதையும் படிங்க: விஜய் அரசு திராவிட நிலைப்பாட்டை தொடர வேண்டும்!: தஞ்சையில் வைகோ பேட்டி!
அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பொன்ராஜ் வெள்ளைச்சாமி என்பவர், தவெக பெண் நிர்வாகிகளின் பொது வாழ்வைக் கெடுக்கும் நோக்கோடும், உள்நோக்கத்தோடும் இழிவான கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருவதாக அந்தப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அளித்த புகாரின் தீவிரத்தன்மையை உணர்ந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் மற்றும் உள்ளூர் போலீசார் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர்:
பெண்களை இழிவாகப் பேசுதல், அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பொன்ராஜ் வெள்ளைச்சாமியைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் சுதந்திரத்திற்கும், பெண்களின் பாதுகாப்புக்கும் தங்களது அரசு முன்னுரிமை அளிக்கும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், பெண் நிர்வாகிகளை இழிவாகப் பேசிய விமர்சகர் மீது தவெக எம்.எல்.ஏ எடுத்த இந்த அதிரடி சட்ட நடவடிக்கை அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!