கோவை தெற்குல ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்குறானுங்க சார்!! திமுக ஆடும் தகிடுதத்தோம்! அதிமுக புகார்!!
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க.,வினரும், கரூரை சேர்ந்தவர்களும் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் புகார் அளித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா குறித்த குற்றச்சாட்டுகள் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் (Amman Arjunan), மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
அவர் அளித்த மனுவிலும், பின்னர் நிருபர்களிடம் பேசியதிலும் பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவர் கூறியதாவது: “கரூரில் இருந்து ரவுடிகளை வரவழைத்து, கோவை தெற்கு தொகுதியில் 19ம் தேதி இரவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கரூரில் இருந்து 2,000 பேர் வந்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. புலியகுளம், 80 அடி ரோடு, ராமநாதபுரம், செட்டி வீதி, அசோக் நகர், ம.ந.க., வீதி, காந்திபுரம் 5வது வீதி எக்ஸ்டன்சன் ஆகிய இடங்களில் கரூரை சேர்ந்தவர்கள் பணம் பட்டுவாடா செய்தனர். அவர்களை பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தோம்.
தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கச் சொல்லி, ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுத்திருக்கின்றனர். பரிசு பொருட்கள் இனி கொடுக்கப் போவதாக சொல்கிறார்கள். ராமநாதபுரம் பெரியார் நகரில் நேற்று பட்டப்பகலில் ஒரு பெண் கவுன்சிலர் வீட்டில் பட்டுவாடா நடந்தது; காலை 8.05க்கு பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; 11:05க்கு வருகிறார்கள். அங்கு பணமே இல்லை என்கிறார்கள். அதற்குள் அங்கிருந்தவர்கள் தப்பி விட்டனர். ம.ந.க., வீதியில் பணம் கொடுத்த 8 பேரை பிடித்தோம். 5 பேர் போலீஸ் வேனில் அமர வைத்திருந்தனர். பணத்துடன் இருந்த 3 பேரை விரட்டி விட்டு விட்டனர். தி.மு.க., கைப்பாவையாக போலீஸ் இருக்கிறது. அதனால், துணை ராணுவப்படை பாதுகாப்புடன் தேர்தல் நடத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: கரூர் ஃபார்முலா கோவையில் எடுபடல? செந்தில்பாலாஜி கப்சிப்! 10 இடங்களில் கூடாரங்களை பிரித்த அலுவலர்கள்!
மேலும், தனது மனுவில், கோவை தெற்கு தொகுதியில் வெளிநகரத்தவர்களின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பணம் வழங்கப்படுவதாகவும், அதை தடுக்க முயன்ற அ.தி.மு.க. ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அனைத்து மையங்களிலும் துணை ராணுவப்படை பாதுகாப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிய நிலையில், இத்தகைய புகார்கள் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஜெயிச்சே ஆகணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் திமுக! 2 லட்சம் பேருக்கு ரூ.2000 பட்டுவாடா?!