×
 

முதல்வர் விஜய்க்கு எதிராக காவிரி பிரச்னையை தூண்டிவிட முடிவு?! போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் நிதியுதவி?!

காவிரி நீர் வரத்து குறைந்து வருவதால், போராட்டத்தில் இறங்க விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர். அதை வாய்ப்பாக பயன்படுத்தி, அரசுக்கு எதிராக விவசாயிகளை திருப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.

தஞ்சாவூர்: காவிரி நீர் வரத்து குறைந்து வரும் நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் இறங்கும் முடிவுக்கு வருகின்றனர். இந்த சூழலை அரசுக்கு எதிராக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக திட்டமிட்டு வருவதால், அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. காவிரி நீர் கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஜூன் மாதத்துக்கு மட்டும் 9.19 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். ஆனால், பிலிகுண்டுலு நீர் அளவை தளத்தை கடந்து 24-ஆம் தேதி வரை வெறும் 2.77 டி.எம்.சி. மட்டுமே வந்துள்ளது. 4.57 டி.எம்.சி. நீர் நிலுவையில் உள்ளது. மாதம் முடிவதற்குள் பற்றாக்குறை 6 டி.எம்.சி.க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், கடந்த 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது அணையில் 41 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து நீர் வரத்து குறைவால் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!

இந்த நிலையில், விவசாய சங்கங்கள் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இதை வாய்ப்பாக பயன்படுத்தி விவசாயிகளை அரசுக்கு எதிராக திருப்ப முயற்சி செய்கின்றன. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விவசாய சங்கங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளன.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பிலிகுண்டுலு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பல விவசாய சங்கங்களை இதில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டங்களில் காவிரி நீர் பிரச்னையை வலியுறுத்த விவசாயிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கி வருகின்றன.

விவசாய சங்கங்கள் எந்த நேரத்திலும் போராட்டத்தில் குதிக்கும் நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்புகள் வாகன வசதி, நிதியுதவி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி பிரச்னை மீண்டும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக, அதிமுக ஆதரவோடு களமிறங்கும் சீமான்?! அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டி உறுதி! தவெகவுக்கு சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share