இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!
சென்னை சைதாப்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதியடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்தடை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால், குறிப்பாக இரவு நேரங்களில் பொதுமக்கள் உறக்கமின்றி அவதிப்படும் நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நேற்று இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. சாரதி நகர், அண்ணாமலை தெரு, ஜோதி அம்மாள் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணிக்கு மேல் வரை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?
இதனால், குழந்தைகள், முதியவர்கள், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட பலர் இரவு முழுவதும் கடும் அவதிக்குள்ளானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மின்தடை குறித்து தகவல் பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்தின் தொடர்பு எண்ணுக்கு பலர் அழைத்தபோது, அழைப்புகள் ஏற்கப்படாமல் துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சைதாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நள்ளிரவு நேரங்களில் இதுபோன்ற மின்தடை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மறுநாள் பணிக்கு செல்ல வேண்டிய ஊழியர்களும் தூக்கமின்மையால் சிரமப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!