மாஸ் ஐடியா..! மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த செஸ் வகுப்புகள்... தமிழக அரசு திட்டம்..!
பழங்குடியின மாணவர்களின் கற்றத்திறனை மேம்படுத்த பள்ளிகளில் செஸ் வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முக்கியமான முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. பழங்குடியின மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக, அவர்கள் படிக்கும் பள்ளிகளில் செஸ் வகுப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது வெறும் விளையாட்டு அறிமுகம் மட்டுமபோன்றல்ல, கல்வியை வலுப்படுத்தும் ஒரு புதுமையான அணுகுமுறை. மாநிலத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் இந்த செஸ் திட்டத்தை அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்த உள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் இத்தகைய பள்ளிகளில் சுமார் 27,000 பழங்குடியின மாணவர்கள் பயில்கின்றனர்.
அவர்களுக்கு செஸ் மூலம் சிந்தனைத் திறன், முடிவெடுக்கும் திறன், பிரச்சினை தீர்க்கும் ஆற்றல் போன்றவற்றை வளர்க்க முடியும் என்பதுதான் அரசின் நம்பிக்கை. இதற்காக ஏற்கனவே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. பழங்குடியின மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, சர்வதேச செஸ் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகள், ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளில் செஸ் வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி..! தமிழ்நாடு அரசின் இரண்டாவது பொருளாதாரம் அறிக்கை இன்று வெளியீடு..!
கற்றல் நுட்பங்களை அதிகரிக்க, மாணவர்கள் சதுரங்கக் காய்கள் போல் செயல்பட பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதன் விளைவாக அவர்களின் சிந்தனை, முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு அரசின் கல்வி சீர்திருத்தங்களில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சி வெயில்ல தான் கூட்டம் நடத்தணும்...! TVK மீட்டிங்கிற்கு போலீஸ் கெடுபிடியா? நடந்த உண்மை என்ன?