நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!
“தென்னகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயன்ற பாஜக முயற்சிகளை முறியடித்தோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 31 முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடற்கரைகள், பூங்கா, சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சியை அமைத்து வரலாறு படைக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என அவர் கூறியுள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், தனது ஆட்சியின் செயல்பாடுகள், பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தொகுதி மறுசீரமைப்பு (delimitation) உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விளக்கினார். மேலும், 2026 தேர்தலை “தமிழகம் vs டெல்லி” என வடிவமைத்ததற்கான காரணத்தையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
“பாஜக தமிழகத்தில் வளரவில்லை”
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைய முடியாது. அதனால் தான், பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க அதிமுகவுடன் இணைந்து செயல்படுகிறது. “தமிழகம் vs NDA” என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியது, அதிமுக மீது இருக்கும் பாஜக முகமூடியை கிழிக்கவே என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் தமிழகம் வரும் போது இப்படியா?... சிறைபிடிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவருக்கு ‘சோதனை’...!
மத்திய அரசு தென்னக மாநிலங்களின் அரசியல் உரிமைகளை பறிக்க முயன்றது. ஆனால், அதனை நாங்கள் உறுதியாக எதிர்த்து முறியடித்தோம். தமிழக மக்களை வஞ்சித்தது அதிமுகதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்”
2019 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்சியின் ஐந்து ஆண்டுகள் திராவிட முறை ஆட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை; மாறாக ஆதரவு அலை உள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சிகள் பலவீனமான கூட்டணி”
அதிமுக கூட்டணி வலுவானதல்ல; மக்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்த தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கும் போராட்டமாகும். டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டை கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிரான போராட்டம் இது என்றும் அவர் கூறினார்.
“டபுள் என்ஜின் ஆட்சி தேவையில்லை”
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கூறும் “டபுள் என்ஜின் அரசு” தேவையில்லை. தமிழ்நாடு ஏற்கனவே வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது; இது மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.
“எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல”
2021 தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். சிலவற்றை தேர்தல் அறிக்கையில் கூட சொல்லாமல் செயல்படுத்தியுள்ளோம் என்றும் அவர் விளக்கினார்.
“அரசியல் கருவியான ED”
மத்திய அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் பிற அமைப்புகள் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. வடஇந்தியாவில் விசாரணைக்கு உட்பட்ட பலர் பாஜகவில் சேர்ந்ததும் வழக்குகள் கைவிடப்படுகின்றன. இதனால், இந்த அமைப்புகள் பாஜகவின் ஒரு கருவியாக செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டன் ஆன அவிநாசி... திடீரென சாலையில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த காரியம்... !