வேளாண் துறையின் பெயரை மாற்றியது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...!
ஈரோட்டில் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இன்று கோவை மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை திறந்து வைப்பதிலும் விவசாயிகளை சந்திப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகளால் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்கின்றனர், தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என உணர்வோடு வாழ்த்துகிறேன். வேளாண்மையில் ஈரோடு பல முன்னோடி விவசாயிகளைக் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது.. பன்னிரண்டாயிரத்து 200 கோடி ரூபாய் என்று அளவில் மாவட்டத்தின் வேளாண் உற்பத்தி மாநிலத்தில் எட்டாவது இடம் பெற்று திகழ்கிறது.
இலவச மின்சாரத்திற்காக இதுவரை 26223 கோடி செலவிடப்பட்டுள்ளது.. ஒன்றிய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை விட நெல்லுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது கரும்பு விவசாயிகள் நலன் கருதி ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலையான ஒரு டன்னுக்கு 3181 ரூபாய்க்கும் மேல் 349 ரூபாய் சிறப்பு ஊக்க தொகையாக வழங்கி வருகிறோம் விவசாயிகளுக்கு பார்த்து பார்த்து செய்வதால் தான் வேளாண்மையும் பெருகி இருக்கிறது உழவர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ததற்கு ஏற்ப பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம் இதுவரை ஐந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம் நிறைய பயன்கள் கிடைத்திருக்கின்றன கடந்த நான்கு ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டி உள்ளோம். 2020-21 ஆண்டில் ஹெக்டருக்கு 2281கிலோவாக இருந்த உணவு தானிய பயிர்கள் உற்பத்தி திறன் 2024 ஆம் ஆண்டில் 2871 கிலோவாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கோவில்ல கூட அட்டூழியம்! சன்னதியை வேலிப்போட்டு மூடுவதா? அறநிலைய துறையை அக்குவேறாக பிரித்த இபிஎஸ்..!
அகில இந்திய அளவில் பயிர் உற்பத்தி திறனில் தமிழ்நாடு சிறப்பான இடம் பெற்றுள்ளது சிறு தானியங்கள் கேழ்வரகு எள், துவரை ஆகியவற்றில் முதலிடம் பெற்றுள்ளோம். மக்காச்சோளம் எண்ணெய் வித்துக்கள் கரும்பு ஆகியவற்றில் இரண்டாவது இடம், குறு தானியங்களில் மூன்றாம் இடம் பெற்றுள்ளோம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை இதற்காக செயல்படுத்தி வருகிறோம் நகரங்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையான வளர்ச்சி அடைய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை இணைத்து மொத்தம் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. புதுப்புது விளம்பரம் போதுமா.. கல்வித்துறை நாசமா போச்சு..! நயினார் பளிச்..!