சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!
ஊழலும், பொறுப்பின்மையும் நிறைந்த அரசுதான் மத்திய அரசு என தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்ததை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திருவாரூரில் தனது பரப்புரையைத் தொடங்கிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 6 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து அவர் வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர், "திருவாரூரில் என் தந்தையின் மண்ணில் தொடங்கி இன்று சீர்காழிக்கு வந்துள்ளேன். நான் உங்கள் ஊர் மாப்பிள்ளை, உங்கள் வீட்டு மருமகனாக இங்கு வாக்கு கேட்க வந்துள்ளேன். நாகை என்பது எப்போதும் திமுகவிற்கு வாகை சூடும் ஊர். மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதிதானே?" என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 6 கூட்டணி வேட்பாளர்களையும் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்: பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!
மீனவர் மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் இந்த மாவட்டங்கள் மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட அவர்: கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதிகளில் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்து கொடுத்த திட்டங்களை ஒவ்வொன்றாக விவரித்தார். நாங்கள் சொன்னதைச் செய்திருக்கிறோம், செய்வதைச் சொல்கிறோம். அதனால்தான் தைரியமாக மக்களிடம் பேசுகிறேன் என்றார்.
தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவித்து வருவதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரக்தியில் தரம் தாழ்ந்து பேசி வருவதாகச் சாடினார். "2026 தேர்தலில் அதிமுக எனும் அவலத்தை மக்கள் அகற்ற வேண்டும்" என அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.
சீர்காழியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகம், டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணியின் வலுவான நிலையைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!