நீட் தேர்வில் பணம் விளையாடுகிறது... இத கேட்க அவங்களுக்கு நேரமில்ல... முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!
நீட் முறைகேட்டை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என முதல்வர் ஸ்டாலின் அதிமுகவினரை விமர்சித்துள்ளார்.
2025 யுஜி நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் அளித்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், மருத்துவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மும்பை நீட் தேர்வு முறைகேட்டை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
இதையும் படிங்க: காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதி... திமுகவிற்கு இது கை வந்த கலை... எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
அதனால்தான் நாங்கள் NEET தேர்வு Neat ஆனது அல்ல என்று சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம். அதற்கான எல்லா காரணங்களும் எங்களிடம் உள்ளன. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை! என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொத்தடிமை கூட்டத்தால் இந்த ஆட்சியை தாங்கி கொள்ள முடியவில்லை... வாட்டி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!