×
 

சரித்திரம் படைத்த முதல்வா..! சமூக நீதியின் சகாப்தமே..!! CM விஜயை புகழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் அருண்ராஜ் பிறந்தநாள் வாழ்த்து கூறி புகழ்ந்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் என்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்த வருகின்றன. முதல்வர் விஜயின் பிறந்தநாளை திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சரித்திரம் படைத்த மக்கள் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை மேடை முழக்கமாகவோ, ஏட்டுச் சுரைக்காயாகவோ விட்டுவிடாமல், அதற்குக் கட்டளைகளால் உயிர் கொடுத்துக் காப்பவர் என்று புகழ்ந்தார். சாதி, மதச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து, உழைக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் உண்மையான 'சமூக நீதியின் சகாப்தத்தை' உருவாக்கியவர் என்று முதல்வர் விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நேர்மைக்கும், தகுதிக்கும், மனிதநேயத்திற்கும் மட்டுமே அங்கீகாரம் அளித்து, சரியானவர்களைத் தேடிக் கண்டறிந்து தகுதியான கரங்களில் அதிகாரத்தைக் கொடுத்து, மக்கள் பணியை தவம்போல் செய்து கொண்டிருப்பவர் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். மேலும், ஆர்ப்பாட்டமில்லாத உழைப்பு... ஆழமான சிந்தனை., எத்தனை உச்சங்களைத் தொட்டாலும், எளிய மக்களின் வலிகளுக்கு, செவிசாய்க்கத் தயங்காத கனிவான இதயம் கொண்டவர் எங்கள் முதல்வர் விஜய் என்றார்.

இதையும் படிங்க: ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

உங்கள் புன்னகையில் ஒளிரும் நம்பிக்கையும், உங்கள் பார்வையில் தெரியும் தீர்க்கமும் நம் மாநிலத்தை இனி வரும் நாட்களில் அமைதி, வளம் மற்றும் எல்லையில்லா வளர்ச்சியின் பாதையில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பது உறுதி என்றும் கூறியுள்ள அமைச்சர் அருண்ராஜ், எந்த ஆரவாரமும் இன்றி, தூய பொதுநலனையும், மக்கள் சேவையையும் மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு பயணிக்கும் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறினார். 

இதையும் படிங்க: வண்டலூர் பூங்கா HOUSEFULL..! முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக இலவச அனுமதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share