சுதந்திர தின ஸ்பெஷல்: விருதுகளை வழங்கி கெளரவித்த சி.எம்.விஜய்... யார் யாருக்கு தெரியுமா?
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதலமைச்சராக முதல் முறை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய விஜய், தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லாவிருது, முதல்வரின் நல்லாளுமை விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், நிறுவனம், சமூக சேவகர், கூட்டுறவு வங்கிக்கான விருதுகள், சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தை தான் கிருஷ்ணசாமி. முன்னாள் எம்பியான இவரின் மகன் விஷ்ணு பிரசாத், தற்போதும் காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட எம்பியாக இருக்கிறார்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. வி.மோகன் சார்பாக அவரின் மகள் விருதை பெற்றுக் கொண்டார். உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்துக்கு ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்
இதையும் படிங்க: இவர்களுக்கு நிதி உதவி உயர்வு... புதிதாக 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சி.எம்.விஜய்...!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதை, அரசு புனர்வாழ்வு மருத்துவமனை இயக்குநர் திருநாவுக்கரசு பெற்றார்.
சிறந்த மண்டலத்துக்கான விருது சென்னை மாநகராட்சியின் 6வது, 2வது மண்டலம் பெற்றன. சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர் நகராட்சி பெற்றது.
சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவை, 2வது இடம் தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர் நகராட்சி பெற்றது. ஆரணி 2வது இடமும், விழுப்புரம் நகராட்சி 3வது இடமும் பெற்றது. சிறந்த பேரூராட்சி முதல் பரிசு திருவிடைமருதூர், 2வது பரிசு கருங்க, 3வது பரிசு செட்டிப்பாளையத்திற்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது அளிக்கப்பட்டது. திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது அளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி சிறந்த மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான விருதை பெற்றது.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் முதல் சுதந்திர தின விழா..! முதல் வரிசையில் த்ரிஷா..! வைரலாகும் காட்சிகள்..!!