×
 

அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசிக்கப்போகும் விஜய்?... லண்டன் பயணத்தின் மற்றொரு பின்னணி...!

நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை விஜய் நேரில் பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் பார்த்து ரசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்தித்து, முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்கு செல்ல உள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் விஜய், செப்டம்பர் 16ஆம் தேதி வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசின் 100 நாள் கணக்கு! தவெக அமைச்சர்களுக்கு ஷாக்! 3 பேர் நீக்கம், ஒருவருக்கு இலாகா மாற்றம்?

இந்த நிலையில், செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மெச்சினன்லே மான்ஸ்கோப்பை கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை விஜய் நேரில் பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர் அஜித்குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.

குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்தியேகமாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்து, அஜித்குமார் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share