மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் இன்று அரசினர் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதாவது, தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 543 என்ற எண்ணிக்கை 850 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை 543-ஆகவே தொடர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.
முதலமைச்சர் விஜய் இன்று கொண்டு வரும் தனித் தீர்மானத்திலும் இதுதொடர்பான கருத்துகளே முன்மொழியப்பட்டன. அதாவது, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதைப் போலவே 543 என்ற எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும்; 850 ஆக உயர்த்தக் கூடாது என்பதே அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!
அதேபோல், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, அதற்குப் பிந்தைய எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பையும் அடிப்படையாக வைத்து தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தென் மாநிலங்கள் இந்தத் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் இன்று தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறார்.
அதேபோல், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீத பெண்கள் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடம்பெற வேண்டும் என்று கூறக்கூடிய மசோதாவை இப்போதே நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான தீர்மானத்தையும் அரசினர் தனித் தீர்மானமாக முதலமைச்சர் விஜய் இன்று முன்மொழிந்தார்.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அப்போதே, சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகத் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் இன்று முதலமைச்சர் விஜய் இந்த அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!