×
 

“ஆர்.எஸ்.எஸ், பாஜக சதிய முழுமையாக முறியடிப்போம்” ... பட்டியல் போட்டு பொளந்தெடுத்த ராகுல் காந்தி...! 

தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறது பாஜக. நான் நாட்டை ஒற்றுமைப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினேன்

தமிழக சட்டமன்றத் தேர் தலை முன்னிட்டு மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் தனியார் கல்லூரி மைதானத்தில் இன்று  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு திட்டம் 1.31 கோடி. மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். எங்கள் கூட்டணி தொடர்ந்து செய்யும். ஆயிரத்யை 2000 ரூபாயாக உயர்த்தி தருவோம். மூத்த குடிமக்களும் மாற்று திறனாளிகளும் 2000 ரூபாய் பெறுவார்கள். முதன் முறையாக சொத்துவாங்கும் பெண்களுக்கு முழுமையான பத்திரபதிவு கட்டண சலுகை உண்டு. அரசு காலிபணியிடங்கள்  300 நாட்களில் நிரப்பபடும். ஆர்.எஸ்.எஸ் பாஜக சதிய முழுமையாக முறியடிப்போம்.

தமிழ்நாட்டுக்கு வரும்போது காமராஜரை நன்றியோடு நினைப்பேன். அவர் ஆட்சியில் கல்விக்காக, உயர்கல்வியை வளர்த்தெடுக்க, தமிழக வளர்ச்சிக்காக செய்தவற்றை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறது பாஜக. நான் நாட்டை ஒற்றுமைப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினேன். நாடு ஒற்றுமையை உருகுலைக்கும் கொடும் செயலாக சிறுபான்மையினரை தாக்குகிறார்கள், சிதைக்கிறார்கள். சிறுபான்மையினர் வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பற்ற வாழ்க்கை வாழ்வதாக அச்ச உணர்வை அடைந்துளனர்.

கிறிஸ்தவராக, இஸ்லாமியராக, சீக்கியராக, பழங்குடியினராக இருப்பவர்களின் உரிமைகளை பறித்து, வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் மீது வன்முறையை ஏவி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்களை தோற்கடிக்க வேண்டும். 

இதையும் படிங்க: "டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறது பாஜக... ஆனால்..” - ட்விஸ்ட் வைத்து பேசிய ராகுல் காந்தி...!

இந்தியாவில் வெறுப்பு அரசியலை விதைக்க முடியாது, அன்பால், ஒற்றுமையால் நிறைந்த நாடு. பாஜக காங்கிரஸ் சித்தாந்தத்த்துக்கும் உள்ள வித்தியாசம். இறுதியில் காங்கிரஸ் தத்துவம்தான் வெற்றிப்பெறும் என்று பாஜக-வுக்கும் தெரியும். காங்கிரஸ் இறுதியில் வெல்லும் என்பது பிரதமரின் மனதுக்கு தெரியும். உங்களை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன். அன்புக்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். தமிழர்களுக்கும் தெரியும்.

எனக்கும் தமிழர்களுகும் உள்ள உறவை அனைவரும் அதிவார்கள். அது அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு.  அனைவரும் என் பாட்டி இந்திரா மீது, தந்தை ராஜீவ் மீதும் பாசம் கொட்டீனீர்கள். என்மீதும் பாசம் கொட்டுகிறீர்கள் அந்த அன்பை நான் போற்றி வருகிறேன். அரசியல் அடுத்து வருவது தமிழக மக்கள் மீதான அன்பு அடிப்படையான மாறாத அன்பு. நான் தமிழனகா பிறக்கவில்லை ஆனால் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக நினைக்கிறேன் என்றார். 
 

இதையும் படிங்க: அனல் தெறிக்கும் அரசியல் களம்... இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை... எங்கெல்லாம் பரப்புரை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share