ஓபிஎஸ் எம்.எல்.ஏ பதவிக்கு ஆப்பு?... சபாநாயகர் அப்பாவுக்கு பறந்த புகார்...!
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாபுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கட்சி பதவிகளை இழந்த ஓபிஎஸின் எம்எல்ஏ பதவிக்கும் சிக்கலா என்ற கேள்வி வந்துள்ளது. பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு அதிமுக ஓபிஎஸ்-ன் கைகளிலிருந்து நழுவி சென்றது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழு உறுப்பினர்களின் சப்போர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததால் ஓபிஎஸ்-ன் கட்சி பதவிகள் அனைத்தும் பறிபோனது. அதேபோல் சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையும் ஆர்.பி உதயகுமார் வசம் சென்றது.
அதிமுக தனது கைகளை விட்டுச் சென்ற பிறகு பாஜக கூட்டணியுடன் கைகோர்த்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் பலம் எனக்குதான் இருக்கிறது என காட்ட நினைத்த ஓபிஎஸுக்கு மக்களவை தேர்தல் தோல்வியை கொடுத்தது. ஆனால் பாஜக கூட்டணியில் அவருக்கான முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. தற்போது அதிமுகாவும் பாஜகவும் கூட்டணி வைத்துவிட்டதால் ஓபிஎஸின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஓபிஎஸக்கு சீட் கொடுக்க மாட்டேன் என இபிஎஸ் முரண்டு பிடித்து வருவதாக சொல்கின்றனர்.
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஓபிஎஸும் அவரது ஆதரவாளர்களும் விழிப்பிதுங்கி நிற்கின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸுக்கு அடுத்து ஒரு புது பிரச்சனை உருவெடுத்துள்ளது. அவரது போடி நாயக்கனூர் தொகுதி எம்எல்ஏ பதவியை பறிக்கக்கோரி சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் அதிமுக எம்எல்ஏவாக இருந்து கொண்டு மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் அப்பாவுக்கு மனு அளித்துள்ளார்.
அதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரையே எதிர்த்து அவர் போட்டியிட்டதை சுட்டி காட்டியுள்ளார். நிபுணர்களிடம் கலந்த ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பேரவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ்-ன் எம்எல்ஏ பதவிக்கும் ஆபத்து வருமா என அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் வயிற்றில் பால் வார்த்த நயினார் நாகேந்திரன்... இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!