கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!
முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், மக்களை மதித்தவர்களாக இருக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் துரை அருள்ராஜன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் வனிதா அருள்ராஜன் ஆகியோரது இல்லத்திற்கு வருகை தந்தார் , கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக்குழு உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வெற்றி க்கழகத்திற்கு எந்த நிபந்தனை இல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்துள்ளது. இதன் மூலம் மற்றொரு தேர்தல் தடுக்கப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுநர் தலையீடு, ஆளுநர் ஆட்சி , ஜனாதிபதி ஆட்சி தடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஜனநாயக கடமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ளது. நிபந்தனை என்றாலும் கூட ஏழை விவசாய தொழிலாளர்கள்,கிராமப்புற மக்கள் ,அரசு ஊழியர்கள் ,மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கோரிக்கை தான் எங்களுடைய கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஒரு சிலர் கூறுவது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு குடைச்சலாக இருக்கும் என கூறி வருகிறார்கள். நூறு ஆண்டுகளில் நாங்கள் எந்த தவறுகளையும் செய்ததில்லை. எனவே சில அறிஞர்கள் அறிவு சிறந்தவர்கள் கம்யூனிஸ்ட் ஆதரவு என்பது குடைச்சலாகவே இருந்து வரும் என்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும் . தமிழக அரசு அரசு மதுபான கடையை குறிப்பிட்ட இடங்களில் மூடி உள்ளது. அதே நேரத்தில் அந்த ஊழியர்களின் வாழ்க்கை இருக்கிறது. அதைப் பற்றியும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசு வெற்றி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்..!!
அரசு தற்போது ஜோதிடரை அரசு பணியில் அமர்த்தியுள்ளது. எந்த மதத்தின் மீது எங்களுக்கு வெறுப்பு அல்ல. ஒரு உயர் பொறுப்பு முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும், மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் மக்களை மதித்தவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அங்கம் வகுக்கிற அதிமுக, திமுக ஆட்சியில் இருக்குமே தவிர நாங்கள் இதுவரையிலும் அந்த இடத்திற்கு வந்ததில்லை . அதிமுக, திமுக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காரணத்தினால் தான் மாற்றத்தை மக்கள் விரும்பி உள்ளனர் .
சகோதரர் டிடிவி தினகரன் அவர் அருகில் உள்ள மூத்த கட்சி தலைவர்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி பணம் பெற்று இருப்பதாக டிடிவி தினகரன் கூறி வருகிறார். நான் உங்கள் மத்தியில் நின்று பேசுகிறேன் யாராவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் அதிமுக திமுக ஆட்சியில் என்னை போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களின் நலனுக்காக வந்திருக்கிறோமே தவிர எங்களுடைய சொந்த நலனுக்காக இதுவரையிலும் நாங்கள் வந்ததில்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி... பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.2,500?... முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு...!