ரெண்டு பேருமே அப்படி பேசியிருக்கக்கூடாது... விஜய் Vs உதயநிதி குட்டி ஸ்டோரிக்கு சிபிஐ கொடுத்த ரியாக்ஷன்...!
அது முதல்வராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி யாரையும் உடல் மொழியால் கருத்து சொல்லக்கூடாது எவ்வளவுதான் எதிர் எதிர் கருத்துக்கள் இருந்தாலும் பண்பு தவறிய வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி கிளை செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அப்போது, தவெக அரசுக்கு ஆதரவளிக்க இடதுசாரிகளை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என திமுக கூறும் நிலையில் அவர்களாகத்தான் வந்தார்கள் என தவெக கூறுகிறது இது குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்களிடம் ஆதரவு கேட்டு தவெக கடிதம் வழங்கியது நாட்டு மக்கள் தனி பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்துள்ளார்கள் அவர்களை அழைப்பது தான் முறை எனவே கவர்னர் ஆட்சி அழைக்க அமைக்க வேண்டும் என நாங்கள் முதல் ஆளாக குரல் கொடுத்தோம் அடுத்து ஆதரவளிப்பதாக கட்சி முடிவு செய்து ஆதரவை நாங்கள் வழங்கினோம். இது அமைப்பாக கூடி தண்ணியல்பாக கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவு ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வெளியில் இருந்து ஆதரவளிக்கிறோம் என கூறினோம் இதை எங்கள் தயவு என்று எப்போதும் நாங்கள் சொல்லவில்லை அதுபோன்ற சிந்தனை எப்போதும் எங்களுக்கு வந்ததில்லை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சொன்னதை கூட பிழை என்று நான் கூறினேன் என பேசினார்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது பொதுக்கூட்டத்தில் பேசியது போல உள்ளது என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சட்டமன்றத்தில் நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் நம் முன்னோர்கள் நல்ல பண்புகளை மரபுகளை சட்டமன்றத்தில் விட்டு சென்றுள்ளார்கள் பல ஆளுமைகள் வீற்றிருந்த இடம் தமிழக சட்டமன்றம். அங்கிருந்து இந்த தலைமுறை கற்றுக் கொள்ளும் என நாங்கள் நினைக்கிறோம். ஒன்றிலிருந்து ஒன்று கற்றுக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பு ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியிடம் இருந்து ஆளும் கட்சியும் கற்றுக்கொள்ள வேண்டும் தோற்றவர்களை எளிதில் கடந்து சென்று விடக்கூடாது அவர்களை கீழாக பார்ப்பது மிக மிக தவறு வெற்றியும் தோல்வியும் மிக மிக இயல்பு தோல்வி இல்லை என்றால் வெற்றி புகழ் இழந்து விடும் நாணயத்தின் இரு பக்கம் போல் ஜனநாயகத்தின் வெற்றி என்பது இந்த ஜனநாயகத்தில் இன்று வெற்றி அடைந்தவர்கள் நாளை தோல்வி அடைய கூடும் இன்று தோல்வி அடைந்தவர்கள் நாளை வெற்றி அடைய கூடும் 40, 50 ஆண்டு காலமாக ஜனநாயகத்திற்கு போராடிவரும் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை அதிகாரத்திற்கு வரவில்லை அது இனிமேல் வராது என்பதற்கான அர்த்தமல்ல ஒரு புதிய சமுதாயத்தை இந்த நாள் தேடும் போது அது இடது பக்கம் தான் நாடு திரும்பும். அந்த நாளுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் நாங்களும் கற்றுக் கொள்கிறோம் என பேசினார்.
இதையும் படிங்க: "வீட்டுக்கு ஒரு அரசு வேலை"... முதல்வர் விஜய் செவி சாய்க்கணும்..! சீமான் வலியுறுத்தல்..!!
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் ஒரு குட்டி கதை ஒன்றை கூறியுள்ளார். அதேபோல ஒரு செய்கையையும் அவர் காண்பித்து இருக்கிறார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர் கேட்டதற்கு, யாரையும் யாரும் தாழ்வு போராட்டம் கூடாது. அது முதல்வராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி யாரையும் உடல் மொழியால் கருத்து சொல்லக்கூடாது எவ்வளவுதான் எதிர் எதிர் கருத்துக்கள் இருந்தாலும் பண்பு தவறிய வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது யார் தவறு செய்தாலும் அது தவறுதான் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அதில் கூடுதலாக இருக்க வேண்டும் முதல்வர் தந்தையை தேடுகிறேன் என கூறியது ஏற்புடையது அல்ல அதேபோல அதற்கு எதிர் கட்சி தலைவர் உதயநிதி முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசியதும் ஏற்புடையது அல்ல மக்கள் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கிறது அதை பற்றி நாம் கூட்டாக சிந்திக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என பேசினார்
மத்திய அரசுடன் தவெக இணக்கமாக இருந்தால் நீங்கள் கூட்டணியில் நீடிப்பீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு, மாநில அரசுகள் தான் நிதியைக் கொடுக்கிறது மாநில அரசுகள் தான் அதிகாரத்தில் இருக்கிறது கொடுப்பதற்கு நீங்கள் யார் கொடுப்பதற்கு நீங்கள் எஜமானர்களும் அல்ல வாங்குவதற்கு மாநில அரசு வேலையாட்களும் அல்ல. கொடுக்க வேண்டும் என்பது சட்டம் சட்டத்தின்படி மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் நிர்வாகத்தில் பிரதமருடன் உள்துறை அமைச்சருடன் இணக்கமாக இருப்பது என்பது வேறு மாநிலத்தின் கொள்கைகளை விட்டு தருவது என்பது வேறு எந்த நேரத்திலும் அதை விட்டுத் தரக் கூடாது போராடி பெற வேண்டும் அத்தகைய போராட்டங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என பேசினார்
மேகதாது அணை பிரச்சனையின் முடிவு தான் என்ன அதேபோல சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிக்கப்படுகிறது அதன் நிலை என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கர்நாடக அரசு என்னதான் அணை கட்டினாலும் காவேரி அன்னை தமிழ்நாட்டை நோக்கி தான் வருவார். எந்த சூழ்நிலையிலும் அங்கு அணை கட்டக்கூடாது நமது உரிமை நீர் சம்பந்தப்பட்டது அல்ல மாநிலத்தின் உறவு சம்பந்தப்பட்டது நாட்டின் ஒருமைப்பாட்டை சம்பந்தப்பட்டது கர்நாடக அரசு மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் தேசிய நெடுஞ்சாலை ரயில் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமாக இருக்கும் போது நதியை நாடு தனதாக்கி கொள்ள வேண்டும் இயற்கைச் செல்வங்கள் அனைத்தையும் நாடு தனதாக்கி கொள்ள வேண்டும் அதேபோல பட்டாசு தொழிலுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் பட்டாசு தொழில் நவீனங்களுக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை அரசு பாதுகாக்க வேண்டும் சீனாவில் தற்போது டெக்னாலஜி அதிகமாக வளர்ந்துள்ளது ஆனால் சிவகாசியில் உள்ள தொழிலாளர்கள் தங்களது கை திறனிலேயே அவர்களுடன் போட்டி போடும் திறமை பெற்றவர்கள் அவர்களுக்கு இன்னும் நுட்பங்களை தந்து ஊதியம் தந்து அவர்களை பாதுகாத்தால் சீனாவையும் நாம் வெல்ல முடியும் என பேசினார்.
இதையும் படிங்க: "நயினார் ஒரு காமெடி பீஸ்"... சட்டசபைக்கு வெளியே ஏதேதோ பேசுறாங்க..! கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்..!!