அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!
அண்ணாமலை கட்சி தொடர்பாக சிபிஎம் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2026 ஜூன் 2 அன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அளித்த அவர், ஜூன் 5 அன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை ஒரு "புதிய அரசியல் இயக்கத்தை" தொடங்க உள்ளதாகவும், அதை பின்னர் ஒரு பிராந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. புதிய இயக்கத்தை கடனாக இருப்பதாக அவர் அறிவித்தார். அதுமட்டுமில்லாத தன்னுடைய பாஜகவின் பயணத்தையும் விவரித்தார்.
WE THE LEADER என்ற தலைப்பில் கட்சியில் சேர்வதற்கு லிங்க் கொடுத்தார். தற்போது 5 லட்சத்தை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி. ஆர்எஸ்எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது; அண்ணாமலையின் அமைப்பு 2501வது அவ்வளவுதான்
இதையும் படிங்க: மாநில உரிமைகளில் ஊசலாட்டம் கூடாது..! தவெக அரசுக்கு CPM கட்சி வலியுறுத்தல்..!!
பாஜக தமிழகத்தில் எடுபடாததால் பெயரை மாற்றி வியாபாரம் செய்ய பிரதமர் மோடி, அமித் ஷா ஆசியுடன் அண்ணாமலை முயற்சி செய்வதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். 2 மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்வதாக சொல்வதெல்லாம் 'மாரீச மான் வேடம்' என்பதை மக்கள் அறிவர்’ என்று தெரிவித்தார். அண்ணாமலையின் இயக்கம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!