×
 

“கர்நாடக முதல்வரை சந்தித்து என்ன செய்ய போறீங்க..?” - சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்...!

'இப்ப அங்க போய் என்ன செய்யப் போறீங்க?' தண்ணீரைத் திருப்பிக் கொண்டு வரப்போறீங்களா?.

தமிழக முதலமைச்சர் விஜய் காவேரி நதிநீர் தொடர்பாக கர்நாடகத்திற்கு செல்வது தேவையற்றது என அட்வைஸ்.  தக்கலை பகுதியில் நடைபெற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் சண்முகம் பேச்சு

 இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இன்று தக்கலை பகுதியில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் சண்முகம்,  இன்றைய தினம் பாராளுமன்றத்தில், வேறொரு பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கிற போது, "காவிரி மேலாண்மை ஆணையத்தினுடைய உத்தரவு இல்லாமல் மேகதாதுவிலே புதிதாக அணையைக் கர்நாடக மாநில அரசாங்கம் கட்ட முடியாது" என்கிற ஒரு தெளிவான பதிலை இன்றைக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

அன்றைக்கு இன்றைக்கு இத்தகைய பதிலைத் தெரிவித்திருப்பது கூட, தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததன் விளைவாகத்தான் இன்றைக்கு மத்திய அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!

எப்போதுமே சர்வதேச அளவில் கூட மேல் பகுதி பாசனம் பெறக்கூடிய மாநிலங்கள், கீழ் பகுதி பாசனம் பெறக்கூடிய மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தான் அவர்கள் நீரப் பயன்படுத்த முடியுமே தவிர... அதுதான் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற விதி! இதையெல்லாம் தெரியாதவர் எப்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார் என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலைமை போய்க்கொண்டிருக்கிற போது, இப்போது நம்முடைய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள் வரக்கூடிய 3-ஆம் தேதி கர்நாடகாவுக்குச் சென்று, கர்நாடகத்தினுடைய முதலமைச்சரைச் சந்திக்க இருப்பதாக இன்றைக்கு உறுதியான தகவல்கள் என்பது வெளிய வந்திருக்கின்றன.

 இப்ப நான் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால், 'இப்ப அங்க போய் என்ன செய்யப் போறீங்க?' தண்ணீரைத் திருப்பிக் கொண்டு வரப்போறீங்களா?. அவன் தண்ணீர் 3,500 cusecs கூட தர முடியாது என்று இன்றைக்கு மேலாண்மை ஆணையத்தில் நேரடியாகத் தெரிவித்துவிட்டான்.

உங்களால் தண்ணீரும் வாங்கி வர முடியாது. 'அணை கட்ட வேண்டும்' என்பது அவர்களுடைய கோரிக்கை, 'அதன் மீது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது' என்று ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு விரிவான தீர்மானம் என்பது நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

அங்கு போய்த் திரும்பவும் 'நாங்க அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்'னு சொல்ற பிரச்சனையும் இல்லை, 'தண்ணிய கேப்போம்'ங்கிற பிரச்சனையும் இல்லை. அணை கட்டுறதுக்கு அனுமதிக்க மாட்டோம்னு நேரடியாகப் போய் சொல்ற பிரச்சனையும் இல்லை, ஏனென்றால் ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டு இருக்கிறது.


இத்தகைய சூழ்நிலையில் எதற்காக இப்போது கர்நாடகாவுக்கு நம்முடைய முதலமைச்சர் செல்ல வேண்டும் என்கிற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். அந்தப் பயணத்தை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அப்படிச் செல்வதனால் நீங்கள் அங்கே சென்று எதையும் செய்ய முடியாது என்று சொன்னால், அது என்ன மாதிரியான உணர்வுகளைத் தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் யோசிக்க வேண்டும். இது ஒரு தேவையற்ற ஒரு பயணம் என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டினுடைய அனுமதி கொடுக்கிற பிரச்சனையே இல்லை அதுல! தமிழ்நாடு அனுமதி கொடுத்தால், அணை கட்டினால் தண்ணீர் வராது. டெல்டா மாவட்டம் பாலைவனமாகும். ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் தண்ணீரைத் தருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தேவையற்ற ஒரு பயணத்தை அவர் மேற்கொள்கிறார் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என பேசினார்

இதையும் படிங்க: அமைச்சரவையில் இடம்பெறுமா சிபிஎம்..? முதல்வருடன் என்ன பேசினோம்... சண்முகம் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share