கை வைத்தால் கதை முடிந்தது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் பெ.சண்முகம் பகிரங்க எச்சரிக்கை...!
ரேஷனில் கை வைத்தால் உங்கள் கதை முடிந்தது என தவெக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் எச்சரிக்கை.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் அரிசியை நம்பி தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் ரேஷன் அரிசி ஆடு ஆடு கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர்கள் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ரேஷன் அரிசியில் இந்த அரசு கை வைத்தால் கதை முடிந்தது என்று கடுமையாக விமர்சித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சார்பில் கடந்த 6 நாட்களாக கிராமம் தோறும் சென்று பொது மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து மனுக்கள் பெற்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் பிரச்சார இயக்க நிறைவு விழா மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதையும் படிங்க: "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!
தமிழ்நாட்டில் பசியின்றி அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த பல்வேறு போராட்டங்கள் எதிரொலியாக ரேஷனில் தமிழக அரசு சார்பில் அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாச பொருட்கள் வழங்கப்படுகிறது.
அவ்வாறு வழங்கப்படும் ரேஷன் அரிசியை வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் ரேஷன் அரிசியை ஆடு மாடுகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதாகவும் மற்றொரு அமைச்சர் ரேஷன் அரிசியை மாவு அரைத்து இட்லி, தோசைக்கு பயன்படுத்தி வருவதாக பேசி வருகின்றனர். ,
தனித்து வாழக்கூடிய பெண்கள் முதியோர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்களின் உயிரை ரேஷன் அரிசி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பசியை போக்கும் ரேஷன் அரிசியில் கை வைத்தால் இந்த அரசு கதை முடிந்தது.
சட்டமன்றத்தில் அமர்ந்து கொண்டு ரேஷன் அரிசி குறித்து பேசுவதைவிட அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது போல் ரேஷன் அரிசியை யார் யார் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டால் நல்லது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தவெக அரசு இதுவரை நெசவாளர்களுக்கு உற்பத்தி செய்ய நூல் கொடுக்காமல் அவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக முடுங்கியுள்ளது.
உடனடியாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள வேட்டி சேலை கொள்முதல் செய்து உடனடியாக நூல் கொடுத்து நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் முதலமைச்சர் விஜய் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டிருந்தாலும் மக்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிக அளவில் உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டம் திருப்தகாரமாக இல்லை. மானிய கோரிக்கையா, மக்கள் பிரச்சனையோ பேசுவதற்கு பதிலாக கடந்த ஆட்சியைக் குறித்து விமர்சனம் செய்வது அவர்களை சீண்டும் வகையில் பேசுவதால் சட்டப்பேரவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற திட்டங்கள் தீட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம் அதே நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில முழுமையாக இருக்க வேண்டும்.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி பிரச்சனையில் அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பயிர் கடன் தள்ளுபடி மூன்று முறை அரசு அறிவிப்பு வெளியீட்டும் விவசாயிகளுக்கு திருப்தி இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறைந்தபட்சம் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75, ஆயிரம் தள்ளுபடி செய்தால் நன்றாக இருக்கும்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பொறுத்த வரை நவீனப்படுத்த கடந்த கால ஆட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது உள்ள அரசும் அதைப் பற்றி என்ன செய்யப் போகிறது என்று தெரியாத நிலையில் உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி பொருத்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து தேவைகளும் நிறைவேற்றுவது லட்சியமாகக் கொண்டு செயல்படுவதாக அவர் பேசினா. இறுதியாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கண்டார்.
இதையும் படிங்க: கையகப்படுத்திய நிலங்களை திருப்பி கொடுங்க.! பரந்தூர் விஷயத்தில் CPM சண்முகம் முக்கிய கோரிக்கை.!!