டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணுக்கு வேட்டு வைத்த நபர்!! கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி! டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!
டெல்லியில், 'டேட்டிங் ஆப்'பில் பழகிய பெண்ணை சந்திக்க வந்த நபரை, அந்தப் பெண்ணின் கூட்டாளிகள் கடத்திச் சென்று, 7 லட்சம் ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் டேட்டிங் ஆப் மூலம் பழகிய இளம்பெண்ணை சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணின் கூட்டாளிகளால் கடத்தப்பட்டு 7 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அனுரூப் நருலா என்பவர், ‘3எஃப்’ என்ற டேட்டிங் ஆப் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் பழகினார். அந்தப் பெண் தன்னை சந்திக்க கல்காஜியில் உள்ள நேரு பிளேஸ் பகுதிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதன்படி அனுரூப் அங்கு சென்றபோது, அந்தப் பெண்ணுடன் வந்த மூன்று ஆண்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.
தெற்கு டெல்லி மற்றும் குருகிராமம் பகுதிகளில் காரை சுற்றி வந்த அந்தக் கும்பல், அனுரூப்பை காருக்குள் வைத்து அடித்து உதைத்து மிரட்டினர். பின்னர் ஆன்லைன் பணப் பரிமாற்றம், ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மொத்தம் 7 லட்சம் ரூபாயை அவரிடம் இருந்து பறித்தனர். அடுத்த நாள் காலை நேரு பிளேஸ் பகுதியில் அவரை இறக்கிவிட்டு தப்பியோடினர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா!! ரூ.9,2000 கோடியா! குவியும் முதலீடு! ஊக்கத்தொகை திட்டத்தால் உணவு படுத்தப்படுத்துல் துறை ஜரூர்!
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆன்லைன் பணப் பரிமாற்ற விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் ஜெனி, நவ்ஜோத், சஞ்சய், ரிஷாப், சகில் சவுஹான் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் டேட்டிங் ஆப் பயன்படுத்துபவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகமில்லாதவர்களை சந்திக்கச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, பொது இடங்களில் சந்திக்கும்போதும் நண்பர்களிடம் தகவல் தெரிவித்து செல்லுமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லி போலீசார் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் ஏமாற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இளைஞர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் உலகில் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!