×
 

எட்டு பேருக்கு தொகுதி ஒதுக்கணும்!! எந்த கூட்டணி போகலாம்?! திமுக, அதிமுக பேரம்! புதிய நெருக்கடியில் பிரேமலதா!

தே.மு.தி.க.,வில் எட்டு பேருக்கு தொகுதிகளை உறுதிசெய்ய வேண்டிய நெருக்கடிக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி அமைப்பதில் இன்னும் முடிவெடுக்காமல் இருந்தாலும், கட்சியில் உள்ள 8 முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இணைய விரும்பியபோது, அதிமுக 8 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்தது. ஆனால் பிரேமலதா ராஜ்யசபா சீட் மற்றும் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி எதிர்பார்த்ததால் பேச்சுவார்த்தை இழுபறியாகியது. 

அதேநேரம் திமுக கூட்டணியில் இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. திமுக தரப்பில் 6 தொகுதிகள் வரை தருவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் பிரேமலதா ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 10 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தியதால், இங்கும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க: திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

இந்நிலையில் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதி உறுதி செய்யும் அழுத்தம் அதிகரித்துள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. 

அப்போது எம்எல்ஏ-க்களாக இருந்த பலர் கட்சியை விட்டு வெளியேறினர். தற்போது சேலம் மோகன்ராஜ், விருகம்பாக்கம் பார்த்தசாரதி, விழுப்புரம் வெங்கடேசன், எழும்பூர் நல்லதம்பி, கெங்கவல்லி சுபா ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

அதேபோல கட்சிக்கு அதிக நிதியுதவி செய்யும் மாநில அவைத்தலைவர் தர்மபுரி இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் தொகுதி உறுதி செய்ய வேண்டியுள்ளது. மேலும் விஜயகாந்த் வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மொத்தம் 8 பேருக்கு தொகுதிகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா தள்ளப்பட்டுள்ளார்.

கூட்டணி குறித்த முடிவு தாமதமாவதால், தே.மு.தி.க. தற்போது மதில்மேல் பூனையாக உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் நிர்வாகிகளின் அதிருப்தி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டால், தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. பிரேமலதா விரைவில் முடிவெடுத்து நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த அதே தவறு! வாய்ப்புகளை வீணடிக்கும் பிரேமலதா! தேமுதிக அவ்வளவுதானா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share