×
 

அரசியலில் இருந்து விலக தயாரா?... ஆதவ் அர்ஜுனாவிற்கு ஓபன் சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்...!

அமைச்சர் ஆதார் அர்ஜுனாவுக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்.

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் அரசியலில் இருந்து விலகி விடுவீர்களா? சவால்.  திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சவால் விட்டு ஆணவமாக பேசியுள்ளார். இந்த பேச்சுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் எட்டு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வருமாம். அதில் தில்லு இருந்தால் தைரியம் இருந்தால் 25 மேயர் பதவியில் ஒரு மேயர் பதவியை வெற்றி பெற்று காட்டுங்கள் என ஆணவமாக எங்கள் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விடுத்து பேசியுள்ளார்.

திடீர் பொறுப்பிற்கு வந்த அமைச்சர் தனது பதவியின் கண்ணியத்தை மறந்து தில், தைரியம் என்றெல்லாம் பேசுவது அநாகரிகமானது. நாங்கள் தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக சொல்கிறோம் உள்ளாட்சி தேர்தல் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு மேயர் பொறுப்பு மட்டுமல்ல அனைத்து மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளையும் எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வென்று காட்டுவோம்.

இதையும் படிங்க: “நள்ளிரவில் ஆபாச SMS’’... அம்பலமான கல்லூரி வார்டனின் லீலைகள்... மாணவிகளை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கல்லூரி நிர்வாகம்...!

நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் அரசியலில் இருந்து விலகிவிடுவீர்களா என்று கேள்வி  எழுப்பி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு சவால் விட்ட ஆதவ்: 

சென்னை ஆர்.கே.நகரில் நேற்று நடைபெற்று பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தவெகவின் இந்த வெற்றி கவர்ச்சியால் கிடைத்தது என்கின்றனர். கவர்ச்சி தான் வெற்றிக்கு காரணம் என்றால், அதே காரணத்திற்காகவே உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் அவருக்கு சினிமாவிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை; படிப்பிலும் சாதிக்கவில்லை; கடைசியாக அரசியலிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றார். 

பிறப்பால் ஒருவர் தலைவராகவோ முதலமைச்சராகவோ உருவாகக் கூடாது; மன்னராட்சி மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். இந்தத் தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் அந்த மன்னராட்சி மனப்பான்மையை நிராகரித்துள்ளனர். அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம், கலைஞர் கருணாநிதி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக்காத்த இயக்கமாகிய திமுகவிற்கு, இதுவரை இல்லாத அளவிலான தோல்வி ஏற்பட்டுள்ளது. திமுக பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கலாம். ஆனால், கலைஞர் கருணாநிதி தலைமையில் இருந்தபோது கட்சித் தலைவர் நேரடியாக தோல்வியடைந்ததில்லை. முதலமைச்சராக இருந்த ஒருவர் தேர்தலில் தோல்வியடைந்த வரலாறும் இல்லை என கடுமையாக சாடினார். 

இறுதியாக இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.25 மேயர்களில் ஒரு மேயரை ஜெயித்து காட்டுங்கள் என திமுகவிற்கு நேரடி சவால் விட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அரசியலை விட்டு விலகத் தயாரா? என ஆதவ் அர்ஜுனாவிற்கு பதில் சவால் விட்டுள்ளார். 

இதையும் படிங்க: கொள்கை, கத்திரிக்காய் ஒன்னும் இல்ல... தவெக தொப்புள் கொடி அறுக்காத குழந்தை..! சிபிஐ முத்தரசன் விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share