×
 

ஏன் பதறுர..? ஊழல்-னு சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திமுக மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு உள்ளது.

தவெக ஆட்சி தொடங்கியதிலிருந்து சட்டமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. தாஸ்மாக் வருவாய், சுரங்கம், மதுபான உரிமங்கள் போன்ற பல துறைகளில் முந்தைய அரசின் முறைகேடுகள் குறித்து அமைச்சர்களும் முதல்வரும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்அவுட் செல்வதும், பேரவை இடைநிறுத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது.

ஆளும் தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, பட்டாசு ஆலை உரிமங்கள் வழங்குவதில் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பேசும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர், ஒரு உரிமம் பெறவேண்டினாலும் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தபோது, பேரவையில் பதற்றம் அதிகரித்தது.சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பயன்படுத்திய ‘ஊழல்’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

தமிழக அரசியல் வட்டாரங்களில் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது திமுகவினரின் எதிர்வினை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒரு வார்த்தையாக ஊழல் என்று சொன்னாலே திமுகவினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது என்றும், அது அவர்களது அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற எதிர்வினையை ஏற்படுத்துகிறது என்றும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், ஊழல் என்று ஏன் இடைச்செருகல் செய்கிறீர்கள் என்று அலறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

இந்தப் பதற்றத்திற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஊழல் செய்யவில்லையெனில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்றும், அதை விடுத்து பதறுவது அந்த வார்த்தை எங்கே குத்துகிறது என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊழல் இலக்கியமே என்றும், ஃபோன் வயர் எப்பவோ அறுந்து போய்விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய அறிக்கைகள் மூலம் அரசின் நடவடிக்கைகள் மீதான கேள்விகளை முன்வைத்து, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த விவாதத்தைத் தூண்டும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: எம்.எல்.ஏ-வாக தொடர அனுமதிக்க முடியாது! இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share