×
 

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடக்கம்: அண்ணா அறிவாலயத்தில் ஐ.யூ.எம்.எல் உடன் இன்று பேச்சுவார்த்தை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையை இன்று (பிப்ரவரி 22 ) அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையை இன்று (பிப்ரவரி 22 ) அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது.தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு மற்றும் ஐ.யூ.எம்.எல் நிர்வாகிகள் இடையே சந்திப்பு நடைபெறுகிறது. டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழுவினர் இந்தக் கூட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு 3 தொகுதிகள் (வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர்) ஒதுக்கப்பட்டன. இருப்பினும், அந்த மூன்றிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில், தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும், கூடுதல் வாய்ப்பைப் பெறவும் 5 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என ஐ.யூ.எம்.எல் தலைமை கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

திமுக தரப்பைப் பொறுத்தவரை, கூட்டணியில் புதிதாக இணையும் கட்சிகளுக்கும் (ம.நீ.ம, தேமுதிக போன்றவை) இடம் ஒதுக்க வேண்டியிருப்பதால், பழைய கூட்டணிக் கட்சிகளுக்குக் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே (Status Quo) இடங்களை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு மீண்டும் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஐ.யூ.எம்.எல்-ஐத் தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சி (MMK) உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுடனும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். காங்கிரஸ் கட்சியுடனான முக்கியப் பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 26 அல்லது 27-ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் தேர்வுப் பணிகள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள சூழலில், தொகுதிப் பங்கீடு குறித்த இந்தத் தொடக்கப்புள்ளி தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மார்ச்சில் மட்டுமே 3 முறையாம்..!! தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! பக்கா பிளான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share