“இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!
எப்போது தமிழ்நாடு திரும்புவார், எப்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தற்போது வரை சிங்கப்பூரிலேயே இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் எப்போது தமிழகம் திரும்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இரவு சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியான நிலையில், அதற்கான விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முன்பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் நேற்று இரவு சென்னை திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தஎ.வ. வேலு மீது, கரூரில் சாலை அமைக்காமல் அமைத்ததாகக் காட்டி முன்கூட்டியே பணம் வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே அவரது வீடு மற்றும் தொடர்புடைய பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. மேலும், அவரை விசாரணைக்காக ஆஜராகுமாறும் அழைப்பு விடுத்திருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பே அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை.
அப்போது, உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாகவும், அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சுமார் 10 நாட்கள் மருத்துவ ஓய்வில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் அவர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: சினிமாவிலிருந்து விடுபட்ட விஜய், இன்னும் சினிமா செயல்களிலிருந்து விடுபடவில்லை! கி.வீரமணி விமர்சனம்!
10 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவர் நேற்று இரவு சென்னை திரும்புவார் என்றும், அதற்கான விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், இன்று அதிகாலை அவர் சென்னை வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சென்னை வரவில்லை. மேலும், அவருக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த விமான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் உடனடியாக தமிழகம் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக அழைத்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஏன் ஆஜராகவில்லை? உண்மையிலேயே அவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறாரா? அல்லது விசாரணையைத் தவிர்ப்பதற்காக வெளிநாட்டில் தங்கியிருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
மேலும், அவருக்குச் சொந்தமாகவும், அவரது உறவினர்களுக்குச் சொந்தமாகவும் மருத்துவமனைகள் உள்ள நிலையில், அங்கு சிகிச்சை பெறாமல் சிங்கப்பூருக்குச் சென்றது ஏன் என்ற கேள்வியையும் அரசியல் ரீதியாக சிலர் முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எ.வ. வேலுவும் கைது செய்யப்படலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. இதனால், கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகவே அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கிறாரா? அல்லது உடல்நலக் குறைவு காரணமாகவே சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறாரா? என்ற இரண்டு கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், அவர் எப்போது தமிழ்நாடு திரும்புவார், எப்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: எ.வ.வேலுவிற்கு இடியை இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... கோடிகளில் நடந்த ஊழல்... வெளியானது பகீர் பின்னணி