×
 

விஜய் மனைவி, மகன் பெயரைச் சொல்லி... இதுவரை சொல்லாத வார்த்தைகளால் வறுத்தெடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

இந்தக் கேள்விகளை அப்போதே மக்கள் மத்தியில் எழுப்பியிருந்தால், தமிழ்நாட்டு மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டையில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, அப்பாவைக் காணோம் என குட்டி கதை சொன்ன முதலமைச்சர் விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தன்னுடைய பேச்சில், எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.  "வெளியே சென்றபோது, சாலையோரத்தில் வெயிலில் தவித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஒருவர், 'உங்க அப்பா எங்கே?' என்று கேட்டதாகவும், அதற்கு அந்தச் சிறுவன், 'தேடிக்கொண்டிருக்கிறேன்' என்று பதிலளித்ததாகவும் கூறப்பட்டது. அவருடைய தந்தை எங்கே இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அது எங்களுடைய பொறுப்பு அல்ல" என்றார்.

மேலும், தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற கேள்விகளை நாங்கள் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். "இன்று நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக உள்ள ஒருவர், தன்னுடைய குடும்பத்தையே சரியாக நிர்வகிக்கவில்லை. அவருடைய மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஒரு நல்ல கணவனாக இருந்திருந்தால், அவரது மனைவி விவாகரத்து கேட்டிருப்பாரா என்ற கேள்வியை நாங்கள் எழுப்பினோம்.

இதையும் படிங்க: "கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறை"..! குத்தாட்டம் போடும் அமைச்சர்..! விளாசிய நயினார்..!

அவருடைய மகன் அவருடன் இல்லை. ஒரு நல்ல தந்தையாக இருந்திருந்தால், மகன் தந்தையை விட்டுப் பிரிந்திருப்பாரா என்றும் கேட்டோம். அதேபோல், மகளும் தந்தையுடன் இல்லாமல் தாயுடன் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினோம்.

இந்தக் கேள்விகளை அப்போதே மக்கள் மத்தியில் எழுப்பியிருந்தால், தமிழ்நாட்டு மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டிருப்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே நிர்வகிக்க முடியாத ஒருவர், எப்படி தமிழ்நாட்டை நிர்வகிக்க முடியும் என்ற கேள்வியை அன்றே எழுப்பியிருந்தால், இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இன்றும் அதே கேள்வியைத்தான் நாங்கள் எழுப்புகிறோம். வாக்களிக்கும் மக்களுக்கு, யாருடைய பின்னணி என்ன, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது முழுமையாகத் தெரியாது. அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்குத்தான் உள்ளது.

தமிழ்நாட்டில் திராவிடப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். ஆனால் தற்போது விஷமமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனைகள்தான் மிஞ்சும். எப்போது தேர்தல் வந்தாலும், இதற்கான காரணங்களை பட்டியலிட்டு மக்களிடம் எடுத்துரைப்போம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிலம்புச் செல்வர் மா. பொ.சி. 121 வது பிறந்தநாள்... தமிழக அமைச்சர்கள் மரியாதை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share