“வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
காங்கிரஸ் தரப்பு தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு அடம்பிடிக்கிறது. ஆனால் திமுக அறிவாலயம் 25க்கு மேல் கிடையாது என்ற கறாரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால், ராகுல் பிடிவாதம் பிடித்தால், காங்கிரஸ் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கவும் நான் தயார். இது லோக்சபா தேர்தல் அல்ல, சட்டசபை தேர்தல். திமுக ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். இங்கே ராகுலுக்கு வேலையே இல்லை என ஸ்டாலின் ஒற்றை வரியில் முடித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் விலகினாலும் ஸ்டாலின் கையில் புதிய அஸ்திரங்கள் உள்ளன. சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த் திமுகவோடு கைகோர்த்திருப்பது, வட மாவட்டங்களில் புதிய பலத்தை அளிக்கிறது. தேமுதிக ஒரு கட்டுப்பாடில்லாத குதிரை; அதை சரியாக பயன்படுத்தினால் பெரிய பலன் தரும். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுக பக்கம் சாய்ந்திருப்பது, தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான வாக்குகளைத் திரட்ட ஸ்டாலினுக்கு பேருதவியாக இருக்கும்.
மறுபுறம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், தற்போது கிளம்பியுள்ள விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் நடிகை தொடர்பான சர்ச்சை, விஜய்யின் அரசியல் பிம்பத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் வியூகங்களில் விஜய் சற்றே பின்வாங்கியுள்ளார். இது திமுகவிற்கு சாதகமாகவே முடிந்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருக்கிறார். ராகுல் காந்தியின் மேலாதிக்கத்தை ஏற்கத் தயாராக இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினாலும், ஓ.பி.எஸ் மற்றும் தேமுதிக போன்ற புதிய கூட்டாளிகளை வைத்துக்கொண்டு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்த அரசியல் சூழல், தமிழ்நாட்டின் தேர்தல் வியூகத்தில் புதிய பரிமாணங்களை உருவாக்கி, கூட்டணி அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக மாறியுள்ளது.
தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது திமுக. அதாவது, வழங்கப்பட்ட 25+1 இடங்களை 'ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விலகுங்கள் என்பதே அந்த இறுதி எச்சரிக்கை. நாளை மறுநாளுக்குள் மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், நாளைக்குள் காங்கிரஸ் தனது திட்டவட்டமான பதிலைத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு அரசியல் களத்தில் தனக்கான சரியான முடிவை திமுக எடுக்கும் என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கிரிஷ் சோடங்கர் ஊடகங்களில் தொடர்ந்து அளித்து வரும் முதிர்ச்சியற்ற பேட்டிகளால், காங்கிரஸ் மீது திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: புதிய பாதையில் காங்கிரஸ்? ஹைதராபாத்தில் ராகுல் காந்தி - ஆதவ்... வலுக்கும் சந்தேகம்..!!