முதலமைச்சர் நாற்காலி என்ன வாடகை சேரா? - விஜயை வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்...!
ஸ்ரீவில்லிபுத்தூர் திடீரென ஒருத்தர் கட்சி ஆரம்பித்துக் கொண்டு முதலமைச்சராக தான் வருவேன் என ஆசைப்படுவதாகவும், முதல்வர் நாற்காலி வாடகைக்கு கிடைக்கும் சேர் போல் எண்ணுவதாகவும் விஜய் மீது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தாக்கு.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு திமுக ஒன்றியம் சார்பாக தம்பிபட்டி தனியார் மண்டபத்தில் வைத்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைபயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர். பாஜக பிரிவினையை உண்டாக்கி வருகிறது.
3000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ் மொழி. நமது மொழிதான் முந்தைய மொழி என்பதை டெல்லியில் உள்ளவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. மொழி தான் அனைத்திற்கும் முதன்மையான மொழி என பல ஆதாரங்களை கொடுத்து விட்டோம் ஆனால் அதை ஒத்துக் கொள்வதாக இல்லை.
திமுகவை ஒழிக்க வேண்டுமென மத்திய அரசு எண்ணுகிறது. நாம் யார் வர வேண்டாம் என்று நினைக்கிறோமோ அந்த பாஜக காலடியில் அதிமுக கிடக்கிறது. அவர்களால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். திடீரென ஒருத்தர் கட்சி ஆரம்பித்துக் கொண்டு முதலமைச்சராக தான் வருவேன் என்கிறார்.ஏதோ முதலமைச்சர் நாற்காலி வாடகைக்கு கிடைப்பது போல் நினைக்கின்றனர். அப்படி எல்லாம் கிடையாது.
இதையும் படிங்க: எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!
எம்ஜிஆர் திமுகவில் இருந்தார் . திமுக எம்ஜிஆரை வளர்த்தது. திமுகவை
எம் ஜிஆர் வளர்த்தார். தற்போது சினிமாவில் நடித்த முடித்தவுடன் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள் அது நடக்கும் காரியம் அல்ல.அவர்களுக்கு 4 ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் மக்கள் ஓட்டு போடும் பொழுது யார் இந்த நாட்டுக்கு தலைவர் என பார்த்து தான் ஓட்டு போடுவார்கள்.அதற்கு தகுதியான தலைவர் மு.க ஸ்டாலினை தவிர வேறு யாருமில்லை.மு க ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி தயாராக இருக்கிறார்.திமுகவை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்தான் அழித்து போனார்கள் என பேசினார்.
இதையும் படிங்க: முதல்வராக ஆசைப்பட்டால் இதுதான் கதியா?.. விஜயை விட்டில் பூச்சி என விமர்சித்த லியோனி..!