×
 

விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்து சென்றுள்ளனர். 

தஞ்சையில் நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட மேகதாது அணைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாகவும், நடிகை த்ரிஷா குறித்து  ஆபாச கருத்துக்கள் தெரிவித்ததாகவும்  தஞ்சாவூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது 

இதைத்தொடர்ந்து சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்து சென்றுள்ளனர். 

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன கீதா ஜீவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக வெற்றி கழக அரசை எதிர்த்து காவல்துறையை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இதையும் படிங்க: தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே குவிந்த திமுகவினர் முதலமைச்சர் விஜயின் உருவப்படத்தை எரிந்தனர். இதனால் தவெகவினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதால் தஞ்சையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. 

திருவண்ணாமலையில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் கழுதை கண்டித்து பெரியார் சிலை அருகே திடீர் சாலை மறியலில் திமுகவினர் ஈடுபட்டனர். முன்னதாக பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்த திமுகவினர் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் பெரியார் சிலை அருகே சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவுடன் தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

உதயநிதி கைதை கண்டித்து ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.  திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி தலைமையில் ஒரு பெண் உட்பட 30 பேர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய் வழக்கு போடாதே என கோஷங்கள் எழுப்பியும் விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் குமரன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர் சாலைகளை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ,  புதிய பேருந்து நிலையம் அருகே  ரவுண்டானா சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் பேருந்துகளில் ஏற்றிச்  சென்று தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

நெய்வேலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் தலைமையில் நெய்வேலி என் எஸ் சி ஆர் சி கோட் எதிரில் சுமார் 200க்கும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் அரசை கண்டித்தும்  கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் சாலை மறியல் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய நுழைவு பகுதியில்  ராமநாதபுரம்  நகர் திமுக சார்பில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி கொடி ஏந்தியவாறு தவெக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ஓசூரில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஓசூர் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர், இதேபோல் முன்னாள் எம்எல்ஏ ஒய் பிரகாஷ் தலைமையில் தளிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் தரையி ல் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: கைதாகிறாரா உதயநிதி?... நீலாங்கரை வீட்டை சுத்துப்போட்ட போலீஸ் படை... உச்சக்கட்ட பதற்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share