திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!
திமுகவில் தற்போது பல்வேறு அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டமும் தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டமும் தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவில் செந்தில் பாலாஜியின் பலம் குறைந்துவிட்டதா என்ற முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது.
திமுகவில் தற்போது பல்வேறு அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டமும் தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு திமுகவில் கரூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜி இருந்து வந்தார். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளுக்கும் செந்தில் பாலாஜியே மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். ஆனால், தற்போது கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... செந்தில் பாலாஜிக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு... தவெகவுக்கு பின்னடைவு...!
கரூர் மேற்கில் அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளும், கரூர் கிழக்கில் கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதி மற்றும் குளித்தலை தொகுதியும் இடம்பெற்றுள்ளன.
இதனால், புதிய மாவட்டச் செயலாளர் நியமனம் நடைபெறும்போது, ஒரு மாவட்டத்திற்குத்தான் செந்தில் பாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்க முடியும்.
அதாவது, அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் மேற்கு மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்கலாம். அல்லது கரூர் கிழக்கில் உள்ள கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளுக்கு அவர் மாவட்டச் செயலாளராக இருக்கலாம்.
இருப்பினும், அநேகமாக அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் மேற்கு மாவட்டத்திற்குத்தான் செந்தில் பாலாஜி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவார் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால், ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்திற்கும் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த செந்தில் பாலாஜியின் பொறுப்பு, தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கரூர் மாவட்டத்தில் திமுகவில் செந்தில் பாலாஜியின் அதிகாரமும், அரசியல் செல்வாக்கும் ஒரு வகையில் குறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!