தொகுதி பங்கீட்டை முடிக்க அவசரம் காட்டும் திமுக! காக்க வைக்கப்படும் திருமாவளவன்! கூட்டணிக்குள் சர்ச்சை!
மார்ச் 18ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக தலைமை முடிவு எடுத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமை தொகுதி பங்கீட்டை வேகப்படுத்தியுள்ளது. மார்ச் 18ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தங்களை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குறைந்த தொகுதிகள் பெற்ற கட்சிகளுடன் ஒப்பந்தம் முடித்து, கடைசி நாட்களில் விசிக மற்றும் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில், மார்ச் 18ஆம் தேதி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது. அதற்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சீனியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மதிமுக உடனான பேச்சுவார்த்தை முடிந்தது. துரை வைகோவின் பிடிவாதத்தால் 4 தொகுதிகளில் 3-இல் உதயசூரியன் சின்னத்தில், ஒரு தொகுதியில் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையும் படிங்க: எம்.பி ஆகிறார் விஜயபிரபாகரன்! ரிஷிவந்தயத்தில் பிரேமலதா! கைவிட்டு போகும் தொகுதிகளால் திமுக நிர்வாகிகள் கலக்கம்!
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு நடந்தது. இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்க ஆலோசிக்கப்பட்டது. சிபிஐ ஒப்புக்கொண்டாலும், சிபிஎம் “நீங்கள் குறைத்தால் எங்களையும் குறைப்பார்கள்” என்று தடுத்ததால் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது.
விசிகவுக்கு இம்முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். எத்தனை என்பது வெளியிடப்படவில்லை. திருமாவளவன் யாருடனும் ஆலோசிக்காமல் அமைதியாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக பேச்சுவார்த்தைக் குழு இதுவரை விசிகவிடம் தொகுதி குறைப்பு கோரவில்லை.
தேமுதிக “கூட்டணியில் 3வது பெரிய கட்சியாக இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் விசிகவை விட ஒரு தொகுதி கூடுதலாக கோரி பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக உள்ளார். இதனால் இரு கட்சிகளுடனும் கடைசி நேரத்தில் பேச்சு நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அறிவாலய வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
புதிய கட்சிகளின் வருகையால் தொகுதி பங்கீடு சிக்கலாகியுள்ளது. திமுக 160+ தொகுதிகளில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. கூட்டணி உறுதியாக்கப்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: நாட்டிற்கு உதவும் செயல்களை செய்யனும்... எது சாதனை?.. ஆளுநர் அர்லேகர் ஐஐடி மாணவர்களுக்கு அறிவுரை..!!