கோவையை யார் யாரோ கோட்டைங்கிறாங்க ஆனால்... ஒரே வார்த்தையில் இபிஎஸ்-ஐ டென்ஷனாக்கிய உதயநிதி...!
கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுக கோட்டை என நிரூபிக்க வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி தேர்தல் பிரச்சார முன்கள பணியாளருடனான ஆலோசனை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இதில் கோவை, நீலகிரி மாவட்ட மாவட்ட, மாநகர், ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் கோவை முதலிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் உரையாற்றியதாவது: கோவையை யார் யாரோ கோட்டை என கூறுகிறார்கள். கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுக கோட்டை என நிரூபிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு முன் கோவையில் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை மாநாடு போல நடத்தினோம்.
மீண்டும் முக்கியமான நேரத்தில் குறிப்பாக தேர்தல் அறிவித்த பிறகு நிர்வாகி கூட்டம் நடத்துகிறோம். வரும் தேர்தலில் கழக அணி வெற்றி பெற வேண்டும்.
இளைஞர் அணி நிகழ்வில் கலந்து கொள்வது குடும்ப நிகழ்ச்சி கலந்து கொள்ளும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களத்தில் இளைஞர் அணி சென்று வாக்கு கேட்டோம். இந்த பிரச்சாரத்தால் 100 சதவீத வெற்றியை பெற்றோம்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாள்..!!
மீண்டும் கழக அணி களத்தில் இறங்கி சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். கோவையை யார் யாரோ கோட்டை என கூறுகிறார்கள். கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுக கோட்டை என நிரூபிக்க வேண்டும். வீடு வீடாக சென்று இளைஞரணி தேர்தல் பணியாற்ற வேண்டும்.
பூத்துக்கு ஒரு இளைஞர் அணி அமைப்பாளர் என அமைத்துள்ளோம்.நமது அணியை தேர்தல் போருக்கு தயார் செய்யவே இந்த ஆலோசனை கூட்டம்..
கலைஞர் கூறியதை இளைஞர் அணி நிறைவேற்றித் தரவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவிலேயே தினமும் மக்களை சந்தித்த முதல்வர் நமது முதல்வர் தான். இறுதி நேரத்தில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் நினைவு படுத்த வேண்டும்.முதல்வர் பல்வேறு திட்டத்தை சொல்லி, அதனை செய்து காட்டியுள்ளார்காலை உணவு திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் எனக்கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: கட்டு கட்டாய் பணம்... திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் சிக்கியது ரூ.30 லட்சம்...!