×
 

DNT ஒற்றை சான்றிதழ் விவகாரம்: கொள்கை முடிவை முதலமைச்சரே எடுப்பார் - அமைச்சர் சம்பத்குமார்!

சீர்மரபினர் (DNT) ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், இது குறித்து மாண்புமிகு முதலமைச்சரே இறுதி முடிவு எடுப்பார் என்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

சீர்மரபினர் (DNT) ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை என்பது கொள்கை முடிவு என்பதால் அதனை முதலமைச்சரே தீர்மானிப்பார் என்றும், விடுதி ஆய்வுகளின் போது கட்சியினர் வரக்கூடாது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மதுரையில் தெரிவித்துள்ளார்.

மதுரை சாத்தமங்கலம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நல விடுதியில் அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகள் தங்கும் அறைகள், கழிவறைகள் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், அங்கிருந்த தக்காளி சாதத்தைச் சாப்பிட்டுப் பார்த்து, அதன் தரம் குறித்துச் சமையலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். மேலும், விடுதி அறைகளில் சிமெண்ட் பூச்சுகள் சரியாக இல்லாதது குறித்துத் துறைப் பொறியாளர்களை அழைத்து எச்சரித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத்குமார், "பள்ளிகள் மற்றும் விடுதிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தும் போது த.வெ.க.வினர் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். விடுதிகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ள மைய சமையலறை (Centralized Kitchen) திட்டத்தை மாற்றி, அந்தந்த விடுதிகளிலேயே தரமான உணவைச் சமைத்து வழங்குவது குறித்து மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. வரும் பட்ஜெட்டில் இத்துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க: வெள்ளை அறிக்கையா..? உண்மையை மறைத்த தவெக... பூந்து விளாசிய செந்தில் பாலாஜி..!!

அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு நடத்திய சாத்தமங்கலம் பகுதி மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்டதாகும். ஆனால், சம்பந்தப்பட்ட தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வான 'விஜய் நண்பன்' கல்லணையைப் புறக்கணித்துவிட்டு, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபாவுடன் அமைச்சர் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகனும் இதேபோல் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வை புறக்கணித்திருந்த நிலையில், தற்பொழுது அமைச்சர் சம்பத்குமாரும் அதையே பின்பற்றியுள்ளது கட்சி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையும் படிங்க: திமுக ஒன்னும் செய்யலயா..? யாருடைய சாதனை..? செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share