அது FAKE! சீல் கூட இல்ல.. இபிஎஸ்ஐ கண்டித்து வெளியானது போலி அறிக்கை என ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் விளக்கம்..!
எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து வெளியானது போலி அறிக்கை என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை என்றும் சாடினர். ஒரு எதிர்க்கட்சி தலைவர் அநாகரிகமாக நடந்துகொள்வது ஏற்புடையதா என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இபிஎஸ் பிரச்சாரத்தின் குறுக்கே ஆம்புலன்ஸ் ஊட்டி சென்ற ஓட்டுநர் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும்., நோயாளி ஒருவரை அழைத்து வர வேண்டி இருந்ததால், அந்த வழியாக சென்றதாகவும் கூறினார். பொதுக்கூட்டம் முடிந்துவிட்டதாக கூறியதால் தான் சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாக்கை அடக்கி பேசுங்க பழனிச்சாமி.. இல்ல மக்கள் அடக்கிடுவாங்க! திமுக கண்டனம்..!
அழைத்தவுடன் ஓடிச் சென்று காப்பாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பாராட்டவில்லை என்றாலும் அவமதித்தது ஏற்க முடியாது என ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. இபிஎஸ் மன்னிப்பு கேட்கா விடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து வெளியான அறிக்கை போலி என தெரியவந்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார். போலியாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது சங்கம் சார்பில் எந்த ஒரு கண்டனமும் தெரிவித்து அறிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இபிஎஸ் மன்னிப்பு கேட்கலனா போராட்டம் வெடிக்கும்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் திட்டவட்டம்..!