தமிழகத்தில் 24 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை? - சாட்டையைச் சுழற்ற தயாராகும் தேர்தல் ஆணையம்!
ஆகையால் தேர்தல் ஆணயத்தில் பதிவு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
நாடு முழுவதும் பல ஆயிரம் கட்சிகள் உள்ளது. அந்த வகையில் தேர்தல் வந்தாலே போதும் சிறு, சிறு கட்சிகள் தலை தூக்க தொடங்கிவிடும். அந்த கட்சியில் உறுப்பினர்கள் என யாராவது இருக்கிறார்களா? என பார்த்தால் கேள்விக்குறிதான். இந்த கட்சிகள் லெட்டர் பேடில் மட்டுமே அரசியல் செய்யும். அந்த வகையில் சும்மா தேர்தல் ஆணயத்தில் மட்டும் பெயரை பதிவு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடாமல் பெரிய கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தேவையானதை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடும். ஆகையால் தேர்தல் ஆணயத்தில் பதிவு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
அதன்படி முதல் கட்டமாக 2019 முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை நிறைவேற்ற பல கட்சிகள் தவறியுள்ளது. மேலும் கட்சிகளின் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலில் நீக்குவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய தலைவர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் இதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 345 கட்சிகளை தேர்தல் ஆணயம் அடையாளம் கண்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்கிடும் வகையிலும் தேவையில்லாமல் பட்டியலிருந்து நீக்கப்பட கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகள் விளக்கம் கூற நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவை தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்படும்.
மேலும் எந்த ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணயம் எடுக்கும். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்து 24 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணயம் அனுப்பியுள்ளது. அதாவது அகில இந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி, அகில இந்திய பெண்கள் ஜனநாயக சுதந்திர கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், அனைத்து இந்திய சமுதாய மக்கள் கட்சி, அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பம்மா மக்கள் கழகம், தேச மக்கள் முன்னேற்ற கழகம், காமராஜர் மக்கள் கட்சி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி, இந்திய வெற்றி கட்சி, மக்கள் நீதி கட்சி, மீனவர்கள் மக்கள் முன்னணி, பசும்பொன் மக்கள் கழகம், சமூக மக்கள் கட்சி தமிழ்மாணி மாநில கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு உரிய விளக்கங்களை அந்த கட்சிகள் தேர்தல் ஆணயத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதுவும் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்காத கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணயம் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தினம் தினம் பாலியல் வன்கொடுமை... இதுதான் ஆன்மீக அரசியலா? நயினார் சரமாரி கேள்வி!