×
 

பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து eps விமர்சனம் செய்துள்ளார்.

விஜய் அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி விஞ்ஞான ஏமாற்று வேலை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சிக்கின்றனர். 

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலை அரங்கேற்றம் செய்து இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 2021-ல் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தோம் என்றும் இப்போது ரூ. 2,044 கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளோருக்கு பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி என தவெக அறிவித்திருந்தது என்று கூறிய EPS, நிலத்தை அளவிட்டு தராமல், இப்போது பணத்தை அளவுகோலாக வைத்தது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்று கூறினார். விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், விவசாயிகளை ஏமாற்றும் அரசு நிலைத்ததாக சரித்திரம் இல்லை என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: ரீல்ஸ் அரசு அல்ல... ரியல் அரசு தேவை...! சிறுமி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share