எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!
தன்னை ஏன் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்தார் என அதிமுக ஒன்றிய செயலாளர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
விருத்தாசலம் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் நீக்கப்பட்ட நிலையில், “நான் என்ன தவறு செய்தேன்., என்னை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் நீக்கினார்” என்று ஒன்றிய செயலாளர் தம்பிதுரை கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளை தினமும் நீக்கி வருகிறார்.
இந்த நிலையில், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரையை கடந்த இரண்டு தினமும் முன்பு கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த தம்பிதுரை தொரவலூர் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, எனது தந்தை கட்சி தொடங்கியதில் இருந்து அண்ணா திமுக ஒன்றிய செயலாளர் ஆக இருந்தார். எனது சகோதரர் ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். நான் தற்போது வரை ஒன்றிய செயலாளர் அண்ணா திமுகவுக்கு எனது குடும்பம் விசுவாசியாகவும் கட்சிக்கு உழைத்து உள்ளோம் என கூறியுள்ளார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு நாள் கட்சி நிர்வாகிகள் எந்த ஒரு காரணம் இன்றியும் அவர் கட்சியிலிருந்து நீக்கி வருகிறார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அனுமதி இல்லாமல் யாரையும் கட்சியில் சேர்க்கக் கூடாது! அதிமுகவில் அதிரடி உத்தரவு!
நான் என்ன தவறு செய்தேன்., என்னை அண்ணா திமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார். என்னை விடுங்கள் இனிமேல் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளை காரணம் இல்லாமல் நீக்க கூடாது என கூறினார். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இனி கட்சி நிர்வாகிகளை நீக்க வேண்டாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!