விஜய்க்கு 41% ஓட்டு இருக்கு! தவெக 121 இடங்களை கைப்பற்றும்! முன்னாள் ஐபிஎஸ் ரவி & குழு நடத்திய கருத்துக்கணிப்பு!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கருத்துக்கணிப்பு: த.வெ.க.வுக்கு 41% ஓட்டு – 121 தொகுதிகளில் வெற்றி சாத்தியம்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிட்ட விஜய்க்கு 41 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், அவரது கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்பை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்தினார். 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 10 முன்னாள் போலீசார் ஈடுபட்டு, ஒவ்வொருவரும் 100 பேரிடம் கருத்து கேட்டனர். மொத்தம் 2.34 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த தரவுகளை செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் பாரம்பரிய முறைப்படி ஆய்வு செய்ததில், 41 சதவீதம் பேர் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு வழக்கமாக ஓட்டு போட்ட பலர் இம்முறை விஜய் தலைமையிலான த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வீட்டில் உள்ள இளைஞர்கள், மகன்-மகள் ஆகியோரின் செல்வாக்கால் பலர் விஜய்க்கு ஓட்டு போட்டுள்ளதாக ரவி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”சாம்ராஜ்யம் அழியும் அதை யாராலும் தடுக்க முடியாது”... திமுக, அதிமுகவுக்கு சவால்விட்ட செங்கோட்டையன்...!
https://www.facebook.com/reel/955200924071542
கொங்கு மண்டலத்தில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளும் சமபலத்தில் உள்ளன. சென்னையில் த.வெ.க.வுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும், தெற்கு மண்டலத்தில் கலவையான முடிவுகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. மொத்தத்தில் த.வெ.க. 121 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக ரவி மதிப்பீடு செய்துள்ளார்.
“மாற்றம் வேண்டும்” என்பதற்காகவும், விஜய் மீதான ஈர்ப்பு காரணமாகவும் பெண்கள் அதிக அளவில் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுள்ளதாக அவர் கூறினார். கொங்கு மண்டல இளைஞர்கள் பலர் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2.27 கோடி ரேஷன் கார்டுகளில் 1.5 கோடி குடும்பங்களில் ஒருவர் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுள்ளதாகவும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரில் கணிசமானோர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் ரவி தெரிவித்தார்.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மே 4ம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையில் உண்மை நிலவரம் தெரியவரும்.
இதையும் படிங்க: இன்னைக்கு இல்ல..! விஜயின் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் ரத்து..! தொண்டர்கள் ஏமாற்றம்.!!