"ஆட்சியில் காங்கிரஸ் பங்குபெறும்"..! விஜயுடன் "கை" கோர்த்தது ஏன்.? கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!
ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்குபெறும் என கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகால திமுக உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதரவு வெளியிடப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் மட்டும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழகம் பெரும் வெற்றியை குவித்தது. தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான பலத்துடன் முன்னிலை வகித்த நிலையில், நாளை அவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைந்து விட்டது.
இதையும் படிங்க: அரசியல் புரிதலோடு நகரணும்..! விஜய்யுடன் கூட்டணி..! மனம் திறந்த காங்கிரஸ் MP ஜோதிமணி..!
தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சராக விஜய் செயல்படுவார் என்பதால் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருப்பதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார். ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்குபெறும் என்றும் வெறும் ஆதரவு மட்டும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சிறப்பான ஆட்சியை கொடுக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார்?! 3 பேர் இடையே போட்டி! காங்., தீவிர ஆலோசனை!!