ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... விஜய் Vs வேல்முருகன் சர்ச்சைக்கு ஜி.கே.வாசன் ரியாக்ஷன்...!
சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருவது கட்சியினருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது ன திருப்பூரில் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் அதிமுக, பாஜக,பாமக மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வலுவான, பலமான கூட்டணியாக மக்களுடைய ஆதரவு பெற்ற கூட்டணியாக உள்ளது. எங்களது நோக்கம் ஆட்சி மாற்றம். இந்த முக்கிய நோக்கத்திற்கு தமிழகத்தில் உள்ள புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தாமகவின் விருப்பம். சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருவது கட்சியினருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது பாஜகவுக்கு மட்டுமல்ல அதிமுக தாமாக உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும் என்றார்.
கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள் பொறுப்பாளர்கள் மாணவ மாணவிகளை ஊக்குவிப்பதற்காக பரிசு வழங்குவது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது பெற்றோர்களே மாணவர்களை அழைத்துக் கொண்டு வரும்போது பெருமைப்படும்போது அதை வாழ்த்துவது நமது கடமையாக இருக்கிறது. அதைப்பற்றி விமர்சிப்தோ அரசியல் ஆக்குவதோ கூடாது என்றார்.
இதையும் படிங்க: அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!
மக்களுக்கு கொடுத்துள்ள எந்த ஒரு வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்று வருகிறது. நான்காண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையிலே உள்ளன சட்டம் ஒழுங்கை சரி செய்யாத அரசாக திமுக அரசு உள்ளது. இந்த அரசு தொடர்ந்து செயல்படுவது வெட்கக்கேடான செயல் கொலை கொள்ளை திருட்டு பாலியல் வன்கொடுமை போதை பொருள் என வளர்ந்து கொண்டே போகிறது. எந்தவிதமான ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை, அரசின் செயல்பாடும் அதற்கு ஏற்றவாறு அமையவில்லை. வரும் பத்து மாத காலங்களில் அவர்களால் இதை எந்த விதத்திலும் சரி செய்ய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு மக்கள் சென்றுள்ளனர்.
எனவே எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன மேலும் முக்கியமான காரணம் மக்கள் மீது சுமையை அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் வரி விதிப்பு என்பது வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது இதனை வேடிக்கை பார்க்கும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. திருப்பூர் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன ரோடு வசதி சரியில்லாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலை திருப்பூரில் இல்லை. என்றார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் இணைகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரன் முக்கிய தகவல்!!