#BREAKING திமுக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்...லம்பாக ரூ.100 கோடி அடித்த அரசகுமாருக்கு போலீஸ் கொடுத்த ஷாக்...!
குளித்தலையில் திருமணம் ஆன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தவெக ஒன்றிய செயலாளருக்கு தர்ம அடி கொடுத்த பெண்ணின் உறவினர்கள். புகாரை ஏற்க மறுக்கும் குளித்தலை காவல் துறையினர்
தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்தது.
தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக நிர்வாகியான பி.டி. அரசகுமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, எந்தெந்த பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அல்லது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று சென்னை போலீசார் அறிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
அதன் அடிப்படையில், இதுவரை 59 தனியார் பள்ளிகள் புகார் அளித்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை பெறப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில், சுமார் 7 கோடியே 34 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை தற்போது முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசகுமார் மோசடி செய்ததாகக் கூறப்படும் பணத்தின் மூலம் எங்கு எங்கு சொத்துகள் வாங்கியுள்ளார் என்பது குறித்தும் சென்னை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமாக எத்தனை பள்ளிகள் ஏமாற்றப்பட்டுள்ளன என்பது தொடர்பான பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அரசகுமார் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார், கடந்த ஆட்சிக் காலத்தில் எத்தனை பள்ளிகளிடமிருந்து எவ்வளவு தொகை பெற்றுள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேபோல், "அடுத்த ஆட்சியும் தங்களுடையதுதான்" என்று கூறி, பல தனியார் பள்ளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் அடிப்படையிலும் சென்னை காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்றும் காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பி.டி.அரசகுமார் மீது குண்ட தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!