“தவெகவை இயக்கும் கிறிஸ்துவ மிஷனரிகள்...” - குண்டைத்தூக்கிப் போட்ட இந்து முன்னணி மாநில தலைவர்...!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இந்த அரசாங்கம் மரண அடி வாங்கிக் கொண்டு தான் வரும்,முந்தைய அரசு மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டது அதே போல் தான் இந்த அரசுக்கும் ஏற்படும்-இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா விமர்சனம்
பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மலை உச்சியில் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் சென்று வழிபாட்டு நடத்தினார். ஏராளமான பெண்கள் கையில் வேல் ஏந்தி கொண்டும் தலையில் பால்குடம் சுமந்தும் கிரிவலம் சென்றனர்.
முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது: சென்ற வருடம் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு அளித்திருந்தது அன்றைய அரசு அந்த தீர்ப்பை நிறைவேற்ற வில்லை அந்த தீர்ப்பை நிறைவேற்றதற்கு காரணம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு உள்ளார்கள் இந்த அரசாங்கம் ஐஏஎஸ்,ஐபிஎஸ் படித்த அதிகாரிகளை மன்னிப்பு கேட்க அளவிற்கு விட்டுவிட்டது.
இரண்டாவது அமர்வுக்கு சென்றும் சரியான தீர்ப்பு என்று சொல்லி உள்ளார்கள். தொடர்ந்து இந்து முன்னணி 40 ஆண்டுகளாக தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறது.அந்த போராட்டத்தின் விளைவாக அன்றைய மாநில தலைவர் ராஜகோபால் படுகொலை செய்யப்பட்டார். மேலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று பூரண சந்திரன் தனது உயிரை மாய்த்து உள்ளார். அதற்கு முன்னர் ஒரு நபர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவ அலட்சியம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த அரசு பதவியேற்கும் போது மதசார்பற்ற முறையில் நடந்து கொள்வோம் என்று ஜோசப் விஜய் சொல்லியிருந்தார் நாமளும் அந்த வார்த்தையை நம்பி அவருக்கு பாராட்ட தெரிவித்து இருந்தோம். ஆனால் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்ற நிர்மல் குமார் போன அரசாங்கம் எப்படி செயல்பட்டதோ அப்படியே நாங்கள் செய்வோம் என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லியுள்ளார். நீதிமன்றத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்று கேட்டபோது மேல்முறையோடு செல்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள் இந்த அரசு சட்டத்தை மதிக்கவில்லை.
உயர் நீதிமன்றத்தில் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடை சம்பந்தமாக வழக்கு வந்தது அதற்கு உயர் நீதிமன்றம் கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். நிர்மல் குமார் அவருக்கு கோபம் வந்துவிட்டது இட ஒதுக்கீடுக்காக மேல்முறையீடு செல்வோம் என்று சொல்லி இருக்கிறார். இடைத்தேர்தல் வருகிறது சுற்றுப்பயணம் போகணும் மேலே தீபம் ஏத்தணும் சொல்லுவாங்க அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க கூடாது என்று சொன்னால் நிர்மல் குமாரை பாராட்டலாம் தைரியமான நபர் கொள்கைக்காக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் ஓட்டுக்காக இந்த அரசியலை செய்கிறார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்
இந்த ஆண்டு நிச்சயமாக தீபம் ஏற்றப்படும் லட்சக்கணக்கான மக்கள் அதற்காக வேண்டிக் கொண்டிருக்கின்றனர் அதற்காக ஒவ்வொரு பௌர்ணமியும் கிரிவலம் வந்துள்ளோம் அவசியம் ஏத்தப்படும். உச்சநீதிமன்றத்தில் நிச்சயமாக நல்ல தீர்ப்பு வரும்
உச்ச நீதிமன்றத்தில் இந்த அரசாங்கம் மரண அடி வாங்கிக் கொண்டு தான் வரும். முந்தைய அரசு மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டது அதே போல் தான் இந்த அரசுக்கும் ஏற்படும். ஓட்டு அரசியலுக்காக தான் தீபம் ஏற்ற விட மாட்டார்கள் இந்த அரசாங்கத்தை இயக்குவது கிறிஸ்துவ இயக்கம் தான் அவர்கள்தான் அவருக்கு ஆலோசனை சொல்கிறார் போல் தெரிகிறது இல்லையென்றால் அவர் நிர்மல் குமாரை கண்டித்து இருக்க வேண்டும் அவர் கண்டிக்கவில்லை.
இங்க இருக்கும் இஸ்லாமியர்கள் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அரசாங்கம் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது வெளியில் இருந்து வரும் முஸ்லிம்கள் ஆடு வெட்ட வேண்டும் கோழி வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் இங்கிருக்கும் முஸ்லிம்கள் இந்துக்களுடன் ஒற்றுமையிடம் தான் இருக்கிறார்கள்.
நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்கள் போகப்போக தான் இந்த அரசு என்ன செய்கிறார் என்று தெரியும். அறநிலையத்துறையில் தான் நிறைய ஊழல் நடந்துள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் தி.க தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ஆனால் கோவில் சம்பந்தமாக நிறைய பிரச்சனைகள் இருக்கிறது நாங்கள் சந்திக்க நேரம் கேட்டதற்கு அவர் கொடுக்கவில்லை என்றார்.
இதையும் படிங்க: புதிய பாடத்திட்ட குழு தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்: அரசு அரசாணை!