×
 

பரமக்குடியில் குவிந்த அரசியல் கட்சி தலைவர்கள்... இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர்கள் முதல் உதயநிதி வரை மரியாதை...!

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

பரமக்குடியில் அனுசரிக்கப்படுகிறது இமானுவேல் சேகரன் 69ஆம் ஆண்டு நினைவு தினம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்.

​​ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரது திருவுருவ சிலையிலும், நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உள்ளனர். மேலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாவட்ட முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சார்பில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ்,,பிரபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்திலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

பாஜக, காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம், தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், முன்னதாக தியாகி இமானுவேல் சேகரனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் செல்லூர் கிராம மக்களும் நேரில் வந்து மரியாதை செலுத்த உள்ளனர்.

​இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக பாதுகாப்பு சட்டம் பிரிவு 163-ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு மற்றும் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 6 டிஐஜிக்கள், 33 எஸ்பிக்கள் உட்பட 8,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 938 பகுதிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய பதற்றமான பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, 38 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

​நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நிலையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர 44 நான்கு சக்கர வாகனங்கள், 67 இருசக்கர வாகனங்களில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பரமக்குடி நகர் முழுவதும் 700 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை மூலமாகத் தகவல்கள் உடனுக்குடன் திரட்டப்பட்டு வருகின்றன.

​அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முழு பரமக்குடி நகரமும் தற்போது காவல்துறையின் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொது நிறுவனங்களின் குழு தலைவராக விஜயன்பன் கல்லானை நியமனம்..!! பேரவை விதியின் கீழ் முக்கிய முடிவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share