×
 

எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாடு வராது என்று தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு குறித்த முக்கியமானத் தரவுகள் மற்றும் அரசின் நிலைப்பாடுகள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்த சுமார் 50% கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியா நிலைமையை சமாளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வியூக ரீதியான எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல்களில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு ஆகியவற்றைச் சேர்த்தால், நாடு அடுத்த 74 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இருப்பினும், ஹார்முஸ் நீரிணை முழுமையாக முடக்கப்பட்டால், தற்போதைய கையிருப்பு 40-45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனத் தரவுகள் எச்சரிக்கின்றன.

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யைப் பெறுவதற்கான மாற்று வழித்தடங்களை (Alternative Routes) இந்தியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, ரஷ்ய எண்ணெய்யை ஈரானின் வான்வெளி அச்சுறுத்தல் இல்லாதப் பாதைகளில் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இதையும் படிங்க: இந்தியா - இலங்கை பக்தர்கள் சங்கமம்... கச்சத்தீவில் தொடங்கிய புனித அந்தோனியார் திருவிழா!

தற்போதையச் சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அரசுத் தரப்பு அதிகாரி இன்று (மார்ச் 3) உறுதி செய்துள்ளார். ஆனால், உள்நாட்டுத் தேவையைப் பொறுத்து, குறிப்பாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதன் ஏற்றுமதியைக் குறைப்பது மற்றும் ரேஷன் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (மார்ச் 2) இரவு நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில், கச்சா எண்ணெய் வரத்து மற்றும் கடல்வழிப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் தற்போது 10-15 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு உள்ள நிலையில், எஞ்சியத் தேவைகளை ஈடுகட்ட அரசு பலமுனை வியூகங்களை வகுத்து வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share