×
 

“உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... சோழவந்தான் எம்.எல்.ஏ. விடம் எகிறிய தவெக நிர்வாகி...!

உழைப்பவர்களுக்கு இடமில்லையா? -சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் நேருக்கு நேர் மோதி நிர்வாகி ஆவேசம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் கேள்வியால் பரபரப்பு

விவசாயிகளின் குரலுக்கு எம்எல்ஏ செவி சாய்ப்பாரா? - விவசாய நிலத்தில் மதுக்கடை விவகாரத்தில், எம்எல்ஏ கருப்பையாவை கேள்வி கேட்ட கிராமத்துப் பெண்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தேர்தல் வெற்றிக்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நன்றி தெரிவிக்கும் பயணத்தை மேற்கொண்டார்.

​நேற்று தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் மற்றும் குருவித்துறை ஆகிய பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் போது, பொதுமக்களின் குறைகளை எம்.எல்.ஏ. கண்டுகொள்ளாமல் சென்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரிக்ட்..! போலீஸ் நடவடிக்கை... கொந்தளிக்கும் மார்க்கண்டேயன் ஆதரவாளர்கள்..!

குருவித்துறை பகுதியில் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தபோது, கட்சி ஆரம்பத்திலிருந்தே  உழைத்த தொண்டர் ஒருவர், எம்.எல்.ஏ.விடம் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை" என அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், அந்தத் தொண்டரைச் சமாதானப்படுத்த முடியாமல் எம்.எல்.ஏ., அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.

மன்னாடிமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் எம்.எல்.ஏ-வை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.  குறிப்பாக, விளைநிலங்களுக்கு நடுவே அரசு டாஸ்மாக் கடை செயல்படுவதால், விவசாயிகள் பெரும் வாழ்வாதார பாதிப்பைச் சந்திப்பதாகத் தெரிவித்தனர்.

​"குடித்துவிட்டு வருபவர்களின் அட்டூழியத்தால், விவசாய வேலைக்கு ஆட்கள் வர மறுக்கிறார்கள்; இதனால் எங்கள் வாழ்வாதாரம் முடங்கிப் போய்விட்டது" என்று விவசாயிகள் எம்.எல்.ஏ-விடம் முறையிட்டனர். 

ஒரு பெண்மணி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியபோது, அந்தப் புகாரைக் கண்டு கொள்ளாமல் எம்.எல்.ஏ. கடந்த சென்ற சம்பவம் அங்கு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி, தான் சென்ற அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் தட்டுப்பாடு, அரசுப் பேருந்து வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரிப் பொதுமக்கள் புகார் மனுக்களை வழங்கினர்.

​நீண்ட நாட்களுக்குப் பிறகு தொகுதிக்கு வந்த தங்களின் பிரதிநிதியிடம், அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை என மக்கள் ஆவேசத்துடன் புகார் தெரிவித்தது சோழவந்தான் பகுதி பெரும் சலசலப்பாக மாறியது

இதையும் படிங்க: செந்தில்பாலாஜி பெயர் இடம்பெற்ற 'ஆப்ரேஷன் மேகாலயா'... 15 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த மெகா திட்டம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share