×
 

ஹார்முஸ் நீரினையை கடக்க கட்டணம் வசூலிக்க திட்டம்!! ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது.

மேற்காசியப் பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் மத்தியில், ஹார்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு ஈரான் எடுத்துள்ள புதிய முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ராணுவ தாக்குதலின் பின்னர், இந்த மோதல் தீவிரமடைந்தது. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அவற்றின் கூட்டணி நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் சுமார் 25 சதவீதம் இந்த வழியாகவே கடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு பல நாடுகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு மட்டுமே அனுமதி!! ஹார்முஸ் நீரினையை திறந்த ஈரான்!! நட்புக்கரம்!!

இதன் விளைவாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, பொருளாதாரத்தில் அழுத்தம் உருவாகியுள்ளது. சர்வதேச சந்தைகளிலும் இதன் தாக்கம் தீவிரமாக உணரப்படுகிறது.

இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க புதிய சட்டத்தை கொண்டு வர ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் கடற்பாதை வழியாக பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிப்பது இயல்பான நடைமுறையே என ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

மொத்தத்தில், போர் சூழ்நிலையுடன் சேர்ந்து இந்த புதிய வரி திட்டமும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் கூடுதல் சவால்களை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share