அடுத்த ஓபிஎஸாக அவதாரம் எடுக்கப்போகும் சிவி சண்முகம்... அன்புமணி மிஸ் ஆனதால் அடிக்கப்போகும் ஜாக்பாட்...!
முன்னாள் அமைச்சரான சிவி சண்முகத்தை துணை முதலமைச்சர் ஆக்கணுன்னு வாக்குறுதி கொடுத்தால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என வன்னியர் சத்திரியர்களின் கூட்டு இயக்கத்தின் தலைவரான சி.ஆர்.ராஜன் தெரிவிச்சியிருக்காரு.
அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து தான் வர உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இதில் முக்குலத்தோர் வாக்குகளை அள்ள, வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பயன்படுத்த அமித் ஷா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேமாதிரி நாடார் வாக்குகளைத் தட்டித்தூக்க தமிழிசை சவுந்தராஜன், பொன் ராதாகிருஷ்ணனையும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாய வாக்குகளுக்கு வானதி ஸ்ரீனிவாசன், அண்ணாமலையை களமிறக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளாராம்.
ஆனால் வட மாவட்டங்களில் அதிக பலம் வாய்ந்த பாமகவுடைய கூட்டணி இருந்தால் தான் வன்னியர்களுடைய வாக்குகளை அள்ள முடியும் என்ற நிலை அதிமுகவுக்கு உள்ளது. ஆனால் எம்.பி.சீட் விஷயத்தில் ஏமாத்ததால் அன்புமணி ராமதாஸ் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. ஆனால் வாய்ப்பை நழுவவிட்டுவிடக்கூடாது என்பதற்காக பாஜக தரப்பிலிருந்து பாமகவில் நிலவி வரும் அப்பா, மகன் பஞ்சாயத்தை சரி செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு பாமக உடன்படவில்லை என்றாலும், வன்னியர்களை வாக்குகளை அள்ள அதற்கு ஒரு முகம் தேவை. அதற்காகத் தான் சிவி சண்முகத்தை துணை முதல்வராக அறிவித்தால், வன்னியர்களின் வாக்குகளை எளிதாக அள்ளிவிடலாம் என எடப்பாடிக்கு சில மூத்த நிர்வாகிகள் அட்வைஸ் கொடுத்திருப்பதாக செய்தி. அது ஏன் சி.வி.சண்முகத்திற்கு துணை முதலமைச்சர் பதவி அப்படின்னு விசாரித்தால், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கிடைக்க முக்கிய காரணமா இருந்ததே அவர் தானாம்.
வர உள்ள தேர்தலிலும் வன்னியர்கள் மத்தியில் பாமக 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தான் கையில் எடுக்கப்போறாங்க. குறிப்பாக இந்த விவகாரத்துல தங்கள ஏமாத்துன திமுக அரசு மேல ரொம்ப கோவமாவும் இருக்காங்க. அதனால தான் வன்னியர்களின் முகமாக சி.வி.சண்முகத்தை முன்னிருத்தலாம் என வலியுறுத்தி வருகிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள்.
இதையும் படிங்க: இம்மாதூண்டு திறமை கூட இல்ல... முக்கிய துறைகளில் வேலுவுக்கு ஏன் முன்னுரிமை? அன்புமணி விளாசல்!
இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!