#BREAKING: ஜனநாயகன் சென்சார் பிரச்சனை... சுப்ரீம் கோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்..!
தணிக்கை சான்று வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் நாடியுள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்று கூறிய வழக்கில் தீர்ப்பு வெளியானது.
தணிக்கை சான்று விவகாரத்தில் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது தவறானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. விஜயின் ஜனநாயகம் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஜனநாயகன் படத்திற்கு U/A சான்று வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு செய்தது. தணிக்கை சான்று வழங்க கூறிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும் எனக் கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதையும் படிங்க: சென்சருக்கு காலக்கெடு நிர்ணயம் தேவை... ஜனநாயகனுக்கு கமல்ஹாசன் MP ஆதரவு...!
தணிக்கைச் சான்று கிடைத்திருந்தால் நேற்றைய தினமே ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி இருக்கும். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் ஜனவரி 21ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த காலதாமதத்தை கருத்தில் கொண்டு தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: செம ஷாக்..! ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க பிறப்பித்த ஆணை ரத்து..!